Monday, December 6, 2021

அறம் காத்த அண்ணல்!



-- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.

Ambedkar.jpg

 பிறப்பினால் இந்துவாகப்
   பிறப்பவர் யாருமில்லை; 
வெறுப்பினைக் கக்கும் வேதம் 
   வேள்வியில் புனிதம் காக்கும்;
சிறப்பிலாச் சிறுமைச் சாதி 
   சிறிதுமே ஏற்க வேண்டாம்; 
இறப்பிலும் இழிவு தீரா! 
   இறக்குமுன் துறத்தல் நன்றே! 

நன்றதைச் சொன்னவர் அம்பேத்கர்!
    நாளுமே அறிவினைப் போற்றிநின்றார்! 
வென்றதைத் தீர்த்திடும் வேகத்தில்
    விட்டொழித்தார் மதம் வீறுகொண்டே!
நன்றவர் புத்தரின் நடையேற்றார்!
    நானில மக்களும் விழிப்புற்றார்! 
அன்னவர் வழிதனில் நாடுசென்றால்
     அவலமே தீர்ந்திடும்! வாழிஅண்ணல்!

--



No comments:

Post a Comment