Thursday, October 7, 2021

காதலுக்குமுன்

-- தீனதயாளன் 


காதலுக்குமுன் 
எதுவும் பெரிதல்ல
எதுவும் ஒரு பொருட்டல்ல 

அன்பு சுகம்  வேண்டி
தானேயே  ஒழியும்
கண்ணீரைப் பொழியும் - ஏன் 
செந்நீரையும் சொரியும். 

துணைநலம் ஏங்கி
உடலைத் துடிக்கவிடும்
உயிரைத் தவிக்கவிடும் - ஏன்
வாழ்வையும் தொலைத்துவிடும். 

காதலின் உயர்வுக்கு - பிற
எல்லாம் சிறிதே!
எல்லாம் குறுந்துகளே!

No comments:

Post a Comment