Monday, September 13, 2021

கோப்பன்ஹாகன் சுவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

-- முனைவர் க.சுபாஷிணி


தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் சுபாஷிணி அவர்களால் 2016ம் ஆண்டு டென்மார்க் கோப்பன்ஹாகன் நகரில் உள்ள அரச அருங்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுக்கொண்டு, அங்கு நேரில் சென்று 4 நாட்கள் அங்கு சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யப்பட்டது. 

ஏறக்குறைய 1800 ஓலைகள் (தனி ஓலைகள்) -  இவற்றுள்  4  சுவடி பனை ஓலை நூல் கட்டுகளின் மின்னாக்கப் படிமங்களை (டிஜிட்டல்) பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்கள் தங்கள் ஆய்விற்குக் கேட்டுக் கொண்டதற்கிணங்க  வழங்கினோம்.

தமிழ் பனை ஓலைச் சுவடிகளைக் கணினி எழுத்துணரி  மூலம் படிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் ... 

எழுதும் முறையில் கிடைமட்டமாகவும், நெடுக்கிலுமாக எழுதப்படும் எழுத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்கள் மூலம் 91% வரை தெளிவாகப் படிக்கும் முறைக்கு ஆய்வின் மூலம் வழி செய்துள்ளனர்,   சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்களான எம். முகமது சாதிக் மற்றும் ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ் ஆகியோர். 

"International Journal of Innovative Technology and Exploring Engineering" என்ற ஆய்விதழில்,   "Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf Manuscripts using Horver Method" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.  இது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் சிறப்பு பெறுகின்றது.

நாம் மின்னாக்கம் செய்த ஓலைகள்  உலகளாவிய பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை விரும்புகின்றது.  பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி  இதற்கு நல்லதொரு உதாரணமாகத் திகழ்கின்றது.



[பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய  பத்திரிக்கை செய்தி]

கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சித்திக்,  இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஆய்வாளருக்கும், நம் தொடர்பாளர் முனைவர் சௌந்தர மகாதேவன்  அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பு  அனுப்பிய கோப்பன்ஹாகன் சுவடிகளைக் கொண்டு ஆய்வு செய்தவரின் கடிதம். 

letter.jpg
ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரைகள் கிடைக்கப் பெற்றதும் அவை தனிவரைவு நூலாக (மோனோக்ராஃப்பாக) வெளியிடப்படும். 

தமிழ் பனை ஓலைச் சுவடிகளை கணினி எழுத்துணரி  மூலம் படிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் ... 
எழுதும் முறையில் கிடைமட்டமாகவும், நெடுக்கிலுமாக எழுதப்படும் எழுத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்கள் மூலம் 91% வரை தெளிவாகப் படிக்கும் முறைக்கு ஆய்வின் மூலம் வழி செய்துள்ளனர், பாளையங்கோட்டை  சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்களான எம். முகமது சாதிக் மற்றும் ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ் ஆகியோர். 

"International Journal of Innovative Technology and Exploring Engineering" என்ற ஆய்விதழில்,   
"Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf Manuscripts using Horver Method" என்ற தலைப்பில்,   
வெளியான அவர்களுடைய ஆய்வுக் கட்டுரை  இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 

---

Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf
Manuscripts using Horver Method

எம். முகமது சாதிக், முதன்மை மற்றும் ஆராய்ச்சி மேற்பார்வையாளர் mmdsadiq[at]gmail.com  பிஜி மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை,
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா

ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ், ஆராய்ச்சி அறிஞர், ரெஜி. எண்: 12334
spurgen[at]gmail.com சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா.

Sadakathullah Appa College-article_page-0001.jpg
Sadakathullah Appa College-article_page-0002.jpg
Sadakathullah Appa College-article_page-0003.jpg
Sadakathullah Appa College-article_page-0004.jpgSadakathullah Appa College-article_page-0005.jpgSadakathullah Appa College-article_page-0006.jpg

---------------
இத்தகைய ஆய்வு முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை  வரவேற்கின்றோம்.  இது போன்ற ஆய்வுத் தேவைகளுக்கு முனைவர் க. சுபாஷிணி (நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு;  மற்றும் இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்)  அவர்களை மின்னஞ்சல் வழியாக (mythforg[at]gmail.com/ksubashini[at]gmail.com) தொடர்பு கொள்ளலாம். 

----





No comments:

Post a Comment