Thursday, January 14, 2021

உழவும் வாழ்வும்

உழவும் வாழ்வும் 

- கோவை எழில்

உடலும் உணர்வும்
உணவும் உயிரும்
உழவின் கொடையே.

உண்மை உணர்ந்து
உலகம் சுழலும்
உவகை உடனே.

ஆனால்...
வறட்சியும் புயலும்
இயற்கையின் சீற்றமும்
மதியிலா மாந்தரும்
மனமிலா மைந்தரும்
மிதித்து அழிப்பார் உழவையே.

ஆனாலும்....
அவர்தம் வயிறும்
அனைவரின் உயிரும்
அண்டியிருப்பது உழவையே.

அதனால்....
உழவு செய்யும் உழவரையும்-அவர்
களையெடுத்த கரங்களையும்
கண்ணில் ஒற்றி நன்றி சொல்வோம் வாரீர்
ஊர்கூடி ஒன்றுகூடி மகிழ்விப்போம் வாரீர்.

பொங்கலிலே பொங்கி வரும் பொழிவாய்
செங்கதிராய் ஒளிர்ந்து வரும் செழிப்பாய்
உழவர் வாழ்வுதன்னை உயர்த்திடுவோம் பாரில்
அவர் வேதனையைத் துடைத்திடுவோம் இந்நாளில்.

No comments:

Post a Comment