Saturday, June 2, 2018

மதுரைக் காதல்

——    திருத்தம் பொன். சரவணன்





கடாஅம் கமழும் களிமத யானைக்
காலுறக் கவ்விய கடுப்புடைக் கராஅம்
மேந்தோல் அன்ன பாகல் செழுங்கனி
மேவர மொசிக்கும் முயிற்றினம் போல
பெருஞ்சோறு அருந்தி பரிசிலும் பெறீஇயர்
பொருநர் பாணரொடு கூத்தரும் வரிப்ப
ஆனாது அளித்த அடிசில் நறுநெய்
நாகம் அசைந்தென நெடுவழி ஒடும்
தேனார் பூம்பொழில் மதுரை யதனில்
வானார் மதியின் காய்வெண் ணிலவில்
பூணாகம் பெறும் பெருங்கல் நாட
பொருள்வயின் எமைநீர் பிரிந்தே செல்விரேல்
வரும்வரை தாங்குமோ தெய்ய ?
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
மறுகியே மாளும் என்னுயிரே!



________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html

No comments:

Post a Comment