Sunday, May 15, 2022

800 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த கீழடி அர்ச்சுன லிங்கேஸ்வரர் கோயில்


-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்

கிபி 1291ஆம் ஆண்டு வாக்கில் மதுரையை ஆட்சி செய்த முதலாம் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கிபி1291,1298 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் இக்கோவிலில் உள்ளது. இக்கோயிலின் தெற்கு, வடக்கு, மேற்கு பக்கச் சுவர்களில் எண்ணற்ற கல்வெட்டுகள் இருந்துள்ளன. 


இப்பொழுது இக்கோயிலானது புனரமைக்கப்பட்டு சமீபத்திய கோயிலாகக் காட்சி அளிக்கிறது. இக்கோயிலின் சிதைந்த பகுதிகள் கோயில் வளாகம் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. அதிட்டான பகுதியிலும் கல்வெட்டுக்கள் தமிழ் எழுத்துக்களுடன் இருக்கின்றன. கல்வெட்டில் இக் கோயிலின் பெயர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் என்றும், இப்பொழுது அர்ச்சுன லிங்கேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 


No comments:

Post a Comment