Sunday, March 7, 2021

உலக மகளிர் நாளில் ....

 உலக மகளிர் நாளில் .... 



உயிர் கொடுத்து
முளைக்க வைத்து
உணர்வுகளாலேயே 
சிரிக்க வைக்கும்... தாய்

உடன் பிறப்பெடுத்துச்
செல்ல சிலம்பெடுத்து
நீள் பயணத்தில்
உற்ற துணையாகும்
உதிரமது... சகோதரி

இல்லத்திலும்
இல்லறத்திலும்
சேவைக்கு உருகொடுத்து
தேவைகள் தீர்க்கும்
ஓருயிர் ராணுவப்படை...மனைவி

ஒரு வார்த்தை கவிதையாம்
உயிர் பெற்ற கடவுளாம்
சர்வாதிகாரம் கொண்ட
குரும்பரசி ...மகள்

ராணியாகப் பிறந்து
ஞானியாக மறையும்
கலைவாணி எனும்
மகளிரே...
இன்றைய உங்களின் தினத்தில்
வேண்டுகிறேன்
உங்களின் ஆசீர்வாதம் 

- கவிஞர் அமீர்-



No comments:

Post a Comment