Saturday, February 9, 2019

ஒரு தாலாட்டு



—  ருத்ரா இ.பரமசிவன்


மயிலே கிளியே 
மனங்களின் மடியில் வா! 
இன்பத்தின் சிறகுகள் கொண்டு 
மனங்களின் மடியில் வா! 
வானமும் கடலும் 
உன் கூட வரும். 
என் வாழ்வு நீளும் 
என் தாகம் மூளும். 
நீ தானே 
கை விளக்கு! 
காதல் தந்த எழுத்திலே 
ஒரு சொல் ஆகினாய்.
இரவு உராய்வுகளின் 
தீப்பொறிகள் பொசுக்கிய‌
விடிவுகளின் ரகசியம்
எல்லாம் நீயே!
என் போல் நீ ஆகும்போது
உன் போல் நான்
உன் உள்ளே புகுவேன்
அறிவாயா?
உன் பிஞ்சுவிரல்கள்
விரிந்த போது
எல்லா செங்கடல்களும் 
பிளந்து போகும்.
தேவ வசனங்கள்
மூளியாகும்.
சொர்க்கம் வேண்டாம். 
வைரங்கள் வேண்டாம். 
உன் முறுவல் 
ஒன்று தா!..கண்ணே 
உன் முறுவல் 
ஒன்று தா! 
தாலேலோ..தாலேலோ 
தமிழே தமிழே தாலேலோ 



தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)


No comments:

Post a Comment