Friday, February 15, 2019

திருப்புன்கூர்


——    தேமொழி


            திருப்புன்கூர் கோயில் .... இங்கு வரலாற்றில் இருந்த சாதி பேதத்திற்கு ஆவணப்படுத்தும் வகையில் சிற்பச் சான்றும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

            திருநாளைப்போவார்(நந்தனார்)   திருப்புன்கூர் சென்று சிவனை வழிபட விரும்பினாராம், அவர் நன்கு பார்த்து கும்பிடும் வகையில் நந்தியை விலகி நிற்கச் சொன்னாராம் சிவன்.

            கவனிக்க,  உள்ளே வாயேன் என்று சிவன் அவரை அழைக்கவில்லை, அழைக்க விரும்பவுமில்லை. 

இதை ....
"சீரேறும் இசைபாடித்
            திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
            எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
            கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
            புரிந்தருளிப் புலப்படுத்தார்
"
என்று பெரியபுராணம் கூறும்.

source: http://rightmantra.com/wp-content/uploads/2016/02/thirupunkoor-nandhi-3.jpg

            கருவறையில் இருந்து பார்க்கும்பொழுது தோன்றும் காட்சி இது, சிவனின் கட்டளையை ஏற்று பார்வையை மறைக்காமல் தூண்  ஓரமாக ஒதுங்கி நிற்கும் நந்தி.

source: https://i.ytimg.com/vi/JygVxvlwAtU/maxresdefault.jpg

            இந்தப் படத்தில் அறிவிப்புப் பலகையை  படிப்பவர் அருகில் நின்று பார்த்தால் சிவனை நந்தி மறைக்காது.  ஆனால் திருநாளைப் போவாருக்கோ  அதுவரை செல்ல அனுமதியில்லை.

            அவரை உள்ளே அழைக்க சிவனுக்கும் மனமில்லை. அதனால் 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று நந்தியை நகரச் சொன்னாராம்.
நந்தி விலகியதாம். இன்று, 
"நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே"
என்பது மக்கள் வழக்காற்றில் இடம் பெற்றுவிட்ட ஒரு  கூற்று.

source: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/Tiruppunkur1.jpg

            இப்பொழுது படத்தில் தோன்றுவது போல தெருவில் நின்றவாறே நந்தி மறைக்காமல் சிவனை வணங்கலாம். 

source:  https://2.bp.blogspot.com/-fV3kqhPnYtU/Wds4FvEt_NI/AAAAAAAAAjo/q-r1ae-7Fg4gXpSTG1bHuCVNTrIBGaBVwCLcBGAs/s1600/the-off-centre-nandi.jpg

            இன்று இந்த படத்தில் அர்ச்சகர் (?) இருக்கும் இடத்தில் அவர் மூதாதையரும் நின்றிருப்பார்.  அது பிறப்பு அடிப்படையில் உள்ள அனுமதி என்று நமக்குத் தெரிவதால் உறுதியாகச் சொல்லலாம்.

            மற்றொரு பக்கத்தில் உள்ள அம்மையாரின்  மூதாதையர் அனுமதிக்கப்பட்டிருப்பார்களா?  தெரியாது.  உறுதியாகச் சொல்ல வழியில்லை. 

            இந்த ஆண் பெண் இருவரின் உடையமைப்பின் அடிப்படையில்   அவர்களது மூதாதையர் பின்னணி கணிக்கப்படுகிறது.

            ஆண்கள் சட்டையை நீக்கிவிட்டு கோயிலுள் நுழைவதன் தேவை என்ன? 

            குலத்திற்கேற்ற வகையில் ஆடை அணிவது, அணியவேண்டும் என்பது, சட்டை போடக்கூடாது, இரவிக்கை அணியக்கூடாது என்பதெல்லாம் யார் சொன்னது? 

            யார் யார் கோயிலுக்குள் வரவேண்டும் வரக்கூடாது என்று சொன்னதெல்லாம் யார் சொன்னது? கடவுள் சொன்னதா? 

            அவ்வாறு சொல்லியிருந்தால் வள்ளுவர் போல நாமும்  பாடவேண்டியதுதான்... கெடுக உலகியற்றியான்.

            சமய அடிப்படையில் இருந்த சாதிபேதத்தை  நன்றாகவே ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டிற்குரியது. 

            மனதில் ஒரு குற்றவுணர்வே இல்லாமல் பேதம் காட்டியுள்ளார்கள் என்பதற்கு திருப்புன்கூர்  நந்தி இன்று சாட்சியாக நிற்கிறது





படங்கள் உதவி: இணையம்



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)









No comments:

Post a Comment