Sunday, May 13, 2018

என் அம்மா

என் அம்மா 

 — முனைவர் ச.கண்மணி கணேசன்


காலைக் கதிரவன் உதித்தவுடன்
                  தட்டியெழுப்புவாள் என் அம்மா 
கண்ணை விழித்துப் பார்த்தவுடன்
                  கனிவாய்ச் சிரிப்பாள் என் அம்மா 
பல்லைத்தேய்த்து நான் குளிக்கத்
                  துணையாய் இருப்பாள் என் அம்மா 
பள்ளிச் சீருடை அணிவித்துப்
                  பசியை நீக்குவாள் என் அம்மா 
அம்மா டாடா காட்டினால்  தான்
                  அழாமல் வருவேன் பள்ளிக்கு 
மாலை நேரம் வீடு வந்தால்
                  அம்மா முகம்தான் டானிக்கு 


பாடம் படிக்க அமர்ந்து விட்டால்
                  சிம்ம சொப்பனம் தான் எனக்கு 
கெஞ்சிக் கொஞ்சி மிஞ்சி அம்மா 
                  சொல்லித் தருவதென் நன்மைக்கு 
அழகான என் அம்மா கதை சொன்னால்
                  துக்கமும் துயரமும் ஓடிவிடும் 
அன்புள்ள என் அம்மா மடியமர்ந்தால் 
                  தூக்கம்தானே ஓடிவரும் 
உலகிலேயே உயர்ந்தவள் 
                  என் அம்மா அம்மா அம்மா தான்.  



படம் உதவி: ஓவியர் எஸ். இளையராஜா
http://www.elayarajaartsgallery.com/o-painting.php
Mobile No : +91 98411 70866 
Email : artistilayaraja@gmail.com


________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)





No comments:

Post a Comment