Thursday, July 22, 2021

எங்கள் எழுத்தறிவிப்போன்

-- சபாரத்தினம்  


என் வீட்டுக்கு 
செய்தித்தாள் போடும் சிறுவனுக்கு
எத்தனை அக்கறை!!!
வீடு முழுதும் எழுத்தறிவு
நிறைந்திருக்க வேண்டுமாம்.
வீட்டின் முன் பகுதியில்
முதன்மைத் தாளும்
நடை பாதையிலும்
தோட்டத்திலும்
இணைப்புத் தாள்களும்
விரிந்து கிடக்கின்றன.
அவனுக்குத் தான் எத்தனை அக்கறை!!!


-- சபாரத்தினம் 





No comments:

Post a Comment