Saturday, December 23, 2017

கடவுள்கள்

——  ருத்ரா இ பரமசிவன்.  

 


கடவுள் கனமானவர்.
ஆம்
அது ஒரு சிலுவையின் கனம்.
கடவுள் கூர்மையானவர்
ஆம்
உடம்பில் ஆணிகள்
அறையப்பட்டபோது
தெரிந்தது.
கடவுள் ரத்தமானவர்.
ஆம்
அது அங்கே பெருகியபோது
தெரிந்தது.
அப்போது அவர் சொன்னார்.
கடவுளே
தான் என்ன செய்கிறோம் என்று
இந்தக் கடவுள்களுக்கே
தெரியாது.
இவர்களை மன்னியும்.
இந்த வசனத்தில்
ஒன்றல்ல
கோடி கோடி கடவுள்கள்
இருக்கிறார்கள்.




படம் உதவி: விக்கிப்பீடியா
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/King_of_Kings_statue%2C_Solid_Rock_Church%2C_2008.jpg/1024px-King_of_Kings_statue%2C_Solid_Rock_Church%2C_2008.jpg

________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com) 


No comments:

Post a Comment