Thursday, September 14, 2017

அடையாற்றின் குறுக்கே உள்ள சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம்

-- நூ.த.லோக சுந்தரம் 

 
சென்னை சைதாப்பேட்டை (முன்னர் இது சயீதுகான் பேட்டை என அறியப்பட்டது என்பது விக்கிப்பீடியா மூலம்  தெரிகிறது) பகுதியில் அடையாற்றின் குறுக்கே எழுப்பப்பட்ட பாலம் 1726 ல் கட்டப்பட்டது. இது சென்னையின் மிகப் பழமையான, நீளமானபாலம் ஆகும்.  இதனைச் சிலரே அறிந்திருப்பார்கள் எனலாம். இப்பாலத்தின் பழைய  ஓவியங்கள் சிலவற்றை இணையத்தில் கண்டேன். பலரும் அறிந்திரார் எனும் கருத்தில் இங்கு வைத்துள்ளேன்.   அவற்றுடன் கல்வெட்டுச் சான்றுகளுடன் முறையான  ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட பதிவுகளும்  வைக்கப்படுகின்றது. 
   
சென்னை சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின்மேல்,  நீளமான, வழக்கம்  போல்  நீரோட்டத்திற்கு 90 பாகையில் குறுக்காகவும்  வடக்கு தெற்காகவும்  கட்டப்பட்ட பாலம் ​​​"மார்மலாங்கு ​பாலம்"  ​என வழங்கப்பட்டது.  ​​ பொது ஆண்டு 1726  (உரோம எண்ணில்: MDCCXXVI )​ ஆண்டு எனக்குறிக்கப்பட்ட கல்வெட்டு​ சான்றும் உள்ளது.  பழமையான இப்பாலம் புதுப்பிக்கப்பட்டு இன்று 47 ஆண்டுகளுக்குமேல் ஆகின்றது.

தொல்லியல் துறையினர் வழி,  சென்னை மாநகரக் கல்வெட்டு ஆவண எண் 208/1967 என்கின்ற நூலக​தட்டுகளில் வைத்துள்ள,  ​"​சென்னை" மாநகர கல்வெட்டுகள்"​ எனும் தலைப்புடன் முனைவர் இரா​.​ நாகசாமி பதிப்பாசிரியராக​, ​ தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடாக 2009 இல் வழிவந்த நூலில் கீழ்க்காணும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது

​மாவட்டம்:        சென்னை              
வட்டம்:        தென்சென்னை ​
​ஊர்:        சைதாப்பேட்டை  ​ 
கல்வெட்டு:     4 *  
பதிப்பு:    274 Antiques From Santhome & மயிலாப்பூர் பகுதி- II, பக்கம் 119
மொழி:        பாரசீகம்
வரலாற்று ஆண்டு:    கிபி 1726
இடம்:        சைதாப்பேட்டை பாலத்தின்  கிழக்குப்பக்க சுவரில் பதிக்கப்பட்ட கல்லில் உள்ளது

 
The Marmalong Bridge - William Hodges (1744–1797)
Yale Center for British Art
http://collections.britishart.yale.edu/vufind/Record/1666698
__________________________________________


The Armenian Bridge, near St.Thomas's Mount, Madras - 1798
Copyright : The British Library Board
http://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10152469706471675

Plate 10 from the second set of Thomas and William Daniell's 'Oriental Scenery'. The old bridge on the Adyar River was originally built in 1726 by an Armenian, as recorded by a Latin inscription on it, and has been replaced by the Marmalong Bridge. The Little Mount in the distance is connected with the story of the martyrdom of the Apostle St Thomas who went to India after the Crucifixion and lived there periodically. It is crowned by a Portuguese church built in 1612.
__________________________________________

 
 Marmalong Bridge, Madras - Justinian Gantz (1802–1862)
http://www.artnet.com/artists/justinian-gantz/marmalong-bridge-madras-ct6JFpsGl6lmoaDsNzbZqw2
__________________________________________



 Marmalong Bridge  before the new one was constructed (1966) by Sridhar Venkataraman
__________________________________________
 

 Maraimalai Adigal Bridge (Photo by R Muthusamy) 

 __________________________________________




ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த வணிகர்  "கோச பீடற்சு உசுகன்" (Coja Petrus Uscan)  என்பவர் மக்களின் நன்மைக்காக இப்பாலத்தைக்காட்டியுள்ளதாய் இந்தக்  கல்வெட்டு குறிக்கின்றது.

 மார்மலாங்கு பாலம்  அடிக்கல்  அரபி+இலத்தீன் மொழிகளில்

                                     1      HUNC PONTUM
                                     2      EDIFIKARI JUSSIT
                                     3      PRO BONO PUBLICO
                                     4     COJA PETRUS USCAN
                                     5      NATIONE ARMEN
                                     6      ANNO SALVTIS
                                     7      MDCCXXVI
​                                   ________________________


Plaque Commemorating the  construction of Marmalong Bridge by Coja Petrus Uscan
(multinlingual inscriptions in Persian, Latin and Armenian)




இப்பாலத்தின் போக்குவரத்துக்கான சேவைத் தகுதி குறைந்து வந்தபோது,  பொது ஆண்டு 1960 களில்  மிகவும் புதிதாக  ​"மறைமலை அடிகள் பாலம்" என​ பெயருடன் மாபெரும் பாலமொன்று  ​"அண்ணாசாலை" என்ற பெயருடைய  (முன்னர் ஆங்கிலேயர்களால் கோட்டைக்கும்​ ​ பரங்கி​** (பிரங்கிமலை)  மலைக்கும்​ ​ இடையே  ​அமைக்கப்பட்ட) மவுண்டு சாலையில் கட்டப்பட்டு, தற்கால மாநகராட்சி வாகன  பயணத்திற்கு 47 ஆண்டுகளாகப் பயனில் உள்ளது.


* மற்ற மூன்று முறையே  சிவன் (காரணீசுவரர்), திருமால் (சீனுவாசப்பெருமாள்), விநாயகர் (சித்தி விநாயகர்) கோயில்களில் காணப்பட்டு படி எடுக்கப்படவை ​
** பிரங்கி என்றால் வெளிநாட்டினர் எனப்பொருள் இந்தியில் (பறங்கியர் எனவும் தமிழில் வழங்கும்). சில விஷமிகள் பிருங்கி முனி எனும் புராணங்களில் காணும் கற்பனை பெயர்களுடனும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர்.

படங்கள்:  கூகுள் தேடலில் கிடைத்தவை



________________________________________________________ 










நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  

No comments:

Post a Comment