Wednesday, May 21, 2014

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் --நாம் வாழும் வாழ்க்கை

தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர்.  அவர் பல ஆயிரம் பாடல்கள் இயற்றி உள்ளார் அவை.  எல்லாமே பக்திப் பாடல்கள்.  அவற்றில் அழகான ஒன்று ரேவதி ராகத்தில் அமைந்த  “நாநாடி ப்ரதுகு நாடகமு” என்ற பாடல்.  அதனைத் தழுவி தமிழில் ஒரு பாடல் இதோ:

பல்லவி

நாம் வாழும் வாழ்க்கை யோர் நாடகம் தான்
என்றுமே வேண்டும் இன்பமாம் முக்தி

                                                (நாம்.....)


அனுபல்லவி

பிறப்பதும் நிஜமே இறப்பதும் நிஜமே
இடையில் வாழ் வாழ்க்கையோர் நாடகமே
வாழ்க்கையே மாயந்தான்
முக்தியே உண்மை காண்

                                               (நாம்.....)

சரணம் - 1

உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
வந்திடா துன்கூட சென்றிடும் வேளையில்
வந்திடும் நிச்சயம் நீ செய் நன்மைகள்
தீமைகள் இவற்றின் பலன்கள் தான்

                                              (நாம்.....)




சரணம் – 2

கெட்டதின் பலன் தான் விட்டிடா துன்னையே
நல்லதின் பலனோ கைவிடா துன்னையே
எங்கும் நிறை ஆண்டவன் தாள் பணி என்றும் நீ
அடைவாய் நிச்சயம் இன்பந் தரும் முக்தியே

                                              (நாம்.....)

 ஆக்கம்: திரு  நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

No comments:

Post a Comment