Sunday, May 25, 2014

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் -- திருநீல கண்டர் 7


எங்கள் ஊர் கோவில் திருவிழாவின் மூன்றாவது நாள்.  இயக்குனர் இருள்சாமியின் ஆக்கத்தில் நடந்தது திருநீலகண்ட நாயனார் நாடகம்.

பூஜை முடிந்தது. மேடையை மறைத்திருந்த ஒட்டுப் போடப்பட்டு திரையாய் மாறி இருந்த சீலையை ஒரு புறமிருந்து மறு புறம் சுருட்டிக் கொண்டே ஓடினார் ஒருவர்.

நாடக நடிகர்கள் அனைவரும், இயக்குனர் இருள்சாமியுடன் மேடையில் தோன்றி இறை வணக்கம் பாடினர்:

தொந்திக் கணபதியே
எங்கள் குரல் கேட்டே
வந்திடு நீ இங்கே
கந்த மிகு மலரும்
திங்க நல் கொழுக் கட்டையும்
தந்திடுவோம் நாங்க
காத்திட வேண்டும் நீ
எங்க நாடகம் தனையே

‘திரைப் பையன் கையில் சீலையின் ஒரு முனையைப் பிடித்த படி ஓடுகிறான் மேடையின் முன் புறம் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு.  மறைகிறது மேடை திரைச் சீலையின் பின்னே.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் மீண்டும் ஓடுகிறான் அவன் கையில் திரைச் சீலையை சுருட்டிய படி

மேடையில் சில பானைகள், சட்டிகள் ஒரு புறம்.  மறு புறத்தில் குயவனின் சக்கரமும், பிசைந்த களி மண்ணும்.  “நீல கண்டம்… நீல கண்டம்” என்ற படி குயவன் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறான் பாதி செய்து வைத்த பானை கொண்ட சக்கரத்தினை,

மேடையின் ஒரு புறத்தில் இருந்து மேடைக்கு வருகிறார் உடலெல்லாம் சாம்பல் பூசி ஜடாமுடியும் கழுத்தில் உத்திராட்ச மாலையுமாய் சிவனடியார் ஒருவர், “நீல கண்டம் நீல கண்டம்
என்றபdi.  அவர் கையில் ஒரு திருவோடு.

“தென்னாடுடய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
நீல கண்டம் நீல கண்டம்”

என்று பாடுகிறார்.

“ஐயா வருக வருக” என்றபடி அவர் காலில் விழுகிறார் நீல கண்டக் குயவனார்.  பின் கைகளைக் கட்டியபடி கேட்கிறார், ”ஐயா உங்களுக்கு நான் என்ன சேவை செய்ய வேண்டும்?  ஆணையிடுங்கள்.  செய்திடக் காத்திருக்கிறேன்.”

“நீலகண்டா நான் சில நாட்களுக்கு சைவத் திருத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று ஐயனை தாரிசித்து வர நினைத்துள்ளேன்.  பயண ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டேன்.
.
“ஐயனே அடியேன் என்ன செய்ய்ய வேண்டும் சொல்லுங்கள்.”

“சொல்கிறேன்.  என்னிடம் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷம் ஒன்றினை உன்னிடம் கொடுத்து விட்டுப் போகிறேன்.  அதை நீ பத்திரமாய் வைத்திருந்து நான் திரும்ப வந்து கேட்கும் போது தர வேண்டும்.  செய்வாயா?”

“ஐயா சிவனடியார் தாங்கள் கேட்பதை செய்ய மறுப்பேனா?  கட்டாயம் செய்வேன் ஐயா.  என்னிடம் கொடுங்கள் அதை.  பத்திரமாய்ப் பாதுகாத்து வைக்கிறேன்.”

“இந்தா அந்த பொக்கிஷம்” என்ற படி தன் கையில் இருந்த திருவோட்டினை நீலகண்டனிடம் தருகிறார் சிவனடியார்.  நீலகண்டன் அதை வாங்கி தன் குடிசையின் முன்னே ஒரு பள்ளம் தோண்டி புதைத்து வைக்கிறான்.

“சிவோகம் சிவோகம்” என்றபடி சிவனடியார் வெளியேறுகிறார் அங்கிருந்து.”

திரை விழுகிறது.  தப்பு தப்பு திரைச் சீலை ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் ஓடி அரங்கினை மறைக்கிறது.

“சில மாதங்களுக்குப் பின்” என்று கணீரென ஒலித்திட இருள்சாமியின் குரல், திரைச் சீலைப் பையன் சீலையினைச் சுருட்டிக் கொண்டு ஓட, மேடையில் அதே குயவன் வீட்டு சீன்.

“சிவோகம் சிவோகம்” என்ற படி அரங்கில் நுழைகிறார் சிவனடியார்.  “அய்யா வருக வருக“ என்று அவர் காலில் விழுகிறான் நீலகண்டன்.

“நீலகண்டா எனது பொக்கிஷம் எங்கே?”

“இதோ தருகிறேன் ஐயா” என்றபடி திருவோட்டைப் புதைத்த இடத்தைத் தோண்டுகிறான்.  அங்கு திருவோட்டைக் காணோம்.

“எங்கே,,, எங்கே?  என் ஆஸ்தி எங்கே?  திருடி விட்டாயா நீ அதை நான் சந்தேகப் பட்ட படி?”  உரக்கக் கத்துகிறார் சிவனடியார்.

“மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ அறியேன்” என்று பாடுகிறான் நீலகண்டன்.

“திருப்பித் தாராவிட்டால் என் பொக்கிஷத்தை, நான் ஊரைக் கூட்டி உன்னை உதைகச் செய்வேன்.  மன்னனிடம் முறையிட்டு சிறைக்கும் அனுப்பிடுவேன்.”  மீண்டும் கத்துகிறார் சிவனடியார்.

அப்போது கந்தல் உடையில் ஒருவன், “அய்யா இந்த ஏளெ பசியாத்திக்க எதுனா காசு போடுங்க அய்யா” என்று கையில் இருந்த இரண்டு இருபத்தி ஐந்து பைசா நாணயங்கள் கொண்ட திருவோட்டினைக் குலுக்கிய படி கூட்டத்துள் நுழைகிறான்..

 


(“அய்யா இந்த ஏளெ பசியாத்திக்க எதுனா காசு போடுங்க அய்யா”)

“சோமாறீ…….சோமாறீ நீயாடா லவுட்டி வெச்சுக்கின திருவோட்டெ?  பாவம் தவிக்குறாரு இல்லெ நீல கண்டரு.  கொண்டாடா அதெ இங்கெ” இன்ற படி அவன் மீது பாய்கிறார் தாணாக் காரர் தங்க வேலு.

தொடர்ந்திடக் கூச்சலும் குழப்பமும் ஓடி மறைக்கிறது மெடையினை திரைச் சீலை.

அத்துடனே முடிவுக்கு வருகிறது நாடகமும்.  காரணம் கூடி இருந்தவர்கள், “பாவம் நீல கண்டன்”  “இல்லை இல்லை பாவம் பிச்சைக் காரன்” என எரிஞ்ச கட்சி எரியாத கட்சி மாதிரி இரு கட்சிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால்.

வாங்க நாமும் ஊட்டெப் பாக்க போகலாம் நமக்கு ரெண்டு தரும அடி விழுறதுக்கு முன்னெ.

(படம் கீழை இளையவன் வலைப் பூவில் இருந்து)

23-05-2014                                     நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

1 comment: