Tuesday, May 19, 2020

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால்

—  ருத்ரா இ.பரமசிவன்

முள்ளிவாய்க்கால்
தமிழர்களின் செங்கடல்.
வழி பிளக்க மோசஸ்கள் இல்லை.
தமிழனுக்குள் ஒரு விசை உண்டு.
இன்று அது
சினிமாவுக்குள் இருக்கலாம்.
டாஸ்மாக்கில் இருக்கலாம்.
தேர்தல் கணிப்பொறி எனும்
அந்த ஓட்டைக்குடத்து
நீராகவும் இருக்கலாம்.
ஆனால் அது
ஒரு பொங்குமாங்கடல்.
"கல் பொரு சிறு நுரைகளாய்"
எப்போதும்
உடைந்து கொண்டிருக்கப்போவதில்லை.
ஓடப்பர் உடையப்பர் ஆகும்போது
தடைகள் தூளாகும்.
உலகொப்பர் ஆகும்போது
நம் தமிழின் கதிர்வீச்சு
ஒரு செம்புயல் மூச்சாகும்.


தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)







1 comment: