Thursday, December 27, 2018

இயற்கையின் இறைவழிபாடு

—  திருத்தம் பொன். சரவணன்


வெள்ளை வெண்முகிலே !
துள்ளும் மடமயிலே !!
கொள்ளை போனதுஎன்
உள்ளமுன் அழகினிலே !!!

வெண்ணெய் தின்றுவக்கும்
கண்ணன் துயிலிருக்கும்
பெண்மை தலைக்கொண்ட
மென்மை வெண்முகிலே !

கருமை நிறங்கொண்ட
திருமால் சேர்ந்தானோ?
வெண்மை நிறம்போய்நீ
கண்மை பூண்டதென்ன?

எறியும் மின்னொளியோ(டு)
அறையும் இடியெதற்காம்?
இறைவன் திருவடிக்கோர்
முறைசெய் வழிபாடோ?

கண்ணா போற்றியென
மண்ணோர் கைகூப்ப
அளிந்ததே அக்கார்மலை !!
பொழிந்ததே புதுப்பூமழை !!!




தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/

1 comment: