Tuesday, April 22, 2014

உலகின் முதல் அணுவெடிப்பு நிகழ்ந்த இடம் !



உலகின் முதல் அணு வெடிப்பு தமிழகத்தில் ! என்ன இப்படி ஒரு (அணு)குண்டு இவர் போடுகிறார் என்று நினைகிறீர்களா? புராணம் அப்படித் தானே சொல்லுகிறது. புராணம் உண்மையா இல்லையா என்பதல்ல, ஆனால் அதில் ஏதோ உண்மை ஒளிந்து கிடக்கிறது. பள்ளிகூடத்தில் படிக்கும் காலத்தில், நண்பர்கள் வேங்கடஜலமும் அருணஜலமும் படிப்பில் சூரப்புலிகள். அவர்களால் தான் அது ஜலம் அல்ல, அசலம் அதாவது மலை என்று தெரிந்தது. அதையே வேத கிரி என்றும், அருணகிரி என்றும் கூறுவார்கள். அட, ஆமாம், தங்கமலையை சோணகிரி, வேதத்தில் மலையை வேதகிரி வேதாசலம் என்றும் கூறுவாகள். அருணகிரி என்னும் அருணாசலம் என்பது அப்போது அருணத்தில் மலையா என்றால், ஆம், அருணம் என்பது தீயை குறிப்பது, சிகப்பு நிற சுவாலையை குறிக்கிறது. அதனால் தான் செங்கதிரோனை அருணோதயம் என்கின்றனர் .

அருணை என்னும் பல்லி போன்ற ஊர்வன பிராணி, சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது. சரி அருணகிரி என்பதும் அருணாசலம் என்பதும் அருணமலை என்பதும் நமக்கு புரிகிறது. இந்த திரு அருணா மலை தான் திரிந்து திருவண்ணாமலை ஆகி விட்டது. இந்த இடத்தில் தான் இறைவனின் அடி முடி தேடிய படலம் நடந்தேறியது.




ஒரு விஞ்ஞானி இருக்கிறார் . அவருடைய தகப்பனார் பெயர் சின்ன குழந்தை. ஒரு 1000 வருடம் கழித்து இந்த விஞ்ஞானியை படிக்க நேர்ந்தால், அவர் ஒரு சிறிய குழந்தைக்கு பிறந்ததால், பெரிய விஞ்ஞானி ஆனார் என்றுத் தான் படிப்பார்கள். இப்போது நாம் படிக்கிறோமே 'சீழ்' தலை சாத்தனார் என்று. அன்றும் ஒரு விஞ்ஞானி இருந்தார் அவர் பெயர் அன்னம். இன்னொரு விஞ்ஞானியும் இருந்தார். அவர் பெயர் வராகன். LITERAL MEANINGS ARE SWAN AND PIG RESPECTIVELY. தற்போது உள்ள பெயர்களை உற்று பார்த்தால் இவை புலப்படும். விஞ்ஞானி அன்னம் அவர்கள் SPACE , ஆகாயம் எவ்வளவு பெரியது என அளவிடப் பார்த்தார். வராக சுவாமி அவர்களோ ஒரு பொருளை SUBSTANCE-ஐ பகுத்து கொண்டே போனார். பின்னர் வந்த மக்களால் (பேரழிவுக்கு பின்பு) கிரகிக்க முடியாத நிலையில் இருந்ததால், இதையே அவர்கள் பூமியை தோண்டி கொண்டே சென்ற வராகன் என்று நினைத்து விட்டு இருந்தனர். (Level of perception).


அது ஒரு பொருளின் முடிவு எங்கே என்பதை தேடி கொண்டே போகும் பொது, விஞ்ஞானி அன்னம் அவர்கள் ஆகாயத்தின் விளிம்பை பார்த்து விட்டு வந்தாக பொய் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதற்கு ஒரு பொய் சாட்சியையும் கொணர்ந்தார். அப்போது தான் விஞ்ஞானி வராகன் கடைசியில், பொருளை பகுத்து பகுத்து கடைசியில் அணுவில் வந்து நின்று, அதை பகுக்கும் பொழுது அணு வெடிப்பில் இறைவனை -சிவத்தை- உணர்த்தார். அது தான் மஷ்ரூம் கிலௌட்(MUSHROOM CLOUD) சிகப்பு நிற குன்று போல் உயர்த்த அணு முதல் அணு வெடிப்பு. (RECORDED IN PURANAAS) இது நடந்த இடம் தான் அருணாசல விஞ்சான கூடம். இன்றைய நிலையை போலவே முன்னொரு யுகத்தில் நடந்த விஞ்ஞான நிகழ்ச்சி அல்ல இது. இதுவே ஒரு மெய்ஞான நிகழ்ச்சி . சிவன் அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான்!


ஆக்கம்; திரு ராம் சந்திரசேகரன்

No comments:

Post a Comment