Sunday, April 10, 2022

கருத்தான தமிழணங்கு


  —  ஆர். பாலகிருஷ்ணன்




கருத்தான தமிழணங்கு 
கறுத்திருக்கிறாள். 
ஏனெனில் அவள் 
பொறுப்பாக இருக்கிறாள்.
அதனால் பொங்கி எழுகிறாள்.
சினத்தின் நிறம் 
சிவப்பு மட்டுமல்ல.
கறுப்பும் சிவப்பும்.
ஐயம் இருந்தால்
தொல்காப்பியரை 
கேளுங்கள்...
"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப"*
தாலாட்டி பாலூட்டும் போது 
அவள் தாய் 
தாக்கும் போது அணங்கு.
அதனால் தான் 
" தாக்கணங்கு" என்றார் 
வள்ளுவர்.
தமிழணங்கின் 
கையில் 
தனித்துவ படைக்கலம்.
ழகர வேல்!
எவரும் இதை மறவேல்.

-- ஆர். பாலகிருஷ்ணன்


* "கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப". ( தொல். 855)






No comments:

Post a Comment