Saturday, March 30, 2019

மரத்தின் சிரிப்பு



—  திருத்தம் பொன். சரவணன்



அந்த மாமர இலைகளிடம்
அப்படி என்ன நகைச்சுவையைக்
கூறிச் சென்றதோ காற்று
குலுங்கிச் சிரித்தன இலைகள்.

காற்றும் மரமும் நண்பர்களோ
காற்று பேசும் போதெல்லாம்
குலுங்கிச் சிரித்தன இலைகள்
கைதட்டிச் சிரித்தன நெற்றுக்கள்

காற்றும் கொடியும் காதலரோ
காற்று தீண்டும் போதெல்லாம்
நெளிந்து அசைந்தது அதன்இடை

நெகிழ்ந்து சிரித்தது அதன்மலர்







தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/




No comments:

Post a Comment