Wednesday, February 10, 2021

செம்மொழியென்பது யாதெனில் ...

 செம்மொழியென்பது யாதெனில் ...

--  தேமொழி


பெரும்பாலும் மேலைநாட்டுப் பார்வையில் வரலாறுகள் உருவாயின, அதனால்  கிரேக்கமும் லத்தீனும் செம்மொழிகள் என்று கூறப்பட்டன. 

Greek and Latin languages and literatures are fundamental to Western Civilization.

டியுக்  பல்கலை தளத்தில் செம்மொழிக்கான விளக்கம் .. 
 The modern world prizes critical acumen, clarity, and precision in speech and writing. These were the qualities of language and thought most extolled by the Greeks and Romans.
என்று கூறுகிறது. 

இத்தளம் புகழ் பெற்ற பல்கலையின்  செம்மொழி கல்விக்கானது, அது இவ்வாறு ஒரு  வரையறை   கொடுப்பதால் இதை நான் ஏற்றுக் கொள்வேன். 

கிரேக்க லத்தீன் மொழிகள்  மேலை நாடுகளில் உலாவிய காலத்தில் உலகில் பல பகுதிகளிலும் மொழிகளும் அவற்றில் இலக்கியங்களும் இல்லாமல் இல்லை. 
எவ்வாறு மகா அலெக்சாண்டர்  என்று சொல்லிச் சொல்லி,  அதே போலச் சாதித்த ராஜேந்திர சோழனைப் பேரரசன் என்று நாம் குறிப்பிட மறுக்கிறோமோ அதே நிலைதான் பிறர் சொல்வதையே நாமும் சொல்வதால் நிகழும். 

உங்கள் மொழி ஓவியம் என்றால் அதை எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கட்டுடைத்துப் பார்த்து .. இந்த இந்த காரணங்களால் அவற்றை வகைப் படுத்துகிறீர்களா?
அது போன்ற வரையறைக்குள்  எந்த மொழிகள் வருகின்றன எனக் குறிப்பிடுவதும் மொழி  ஆய்வாளர்களின் வேலைதான். 
அதைப் பேரா. ஜார்ஜ் ஹார்ட்  செய்துள்ளார்.   இது மொழியியல்  ஆய்வில்  பரிணாம வளர்ச்சியால் வளர்வது. 

ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்த போராளிகளின் பட்டியலில் தென்  இந்தியர்கள் மட்டும் இன்று  இடம்பெறவில்லை?
வேலு நாச்சியார், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் எல்லோரும்  அதே வரையறையில் வருவார்கள்.  
ஆனால் "அரசியல்" காரணமாக வரலாற்று நூல்களில் அவர்கள்  ஒதுக்கப் படுகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோமோ,  அது போன்றதுதான் இந்த மொழி "அரசியலும்"

இலக்கணம் இன்றி எந்த மொழியும் இருக்க வாய்ப்பில்லை.  எழுத்து சொல்லுக்கு மட்டுமின்றி பொருளுக்கு  இலக்கணமும் கொண்டது தமிழ் மொழி. 
காலத்தில் முந்தியதாகக் கிடைக்கும் நூலே இலக்கண நூல்தான், அதற்கு அடிப்படையாக இலக்கியம் பல வாய்மொழியாகவாவது இருந்திருக்க வேண்டும். 

அதை ஆவணப்படுத்த  எழுத்து தோன்றியிருக்க வேண்டும்.  
இந்தியா அளவில் பார்த்தோம் என்றால் எந்த மொழிகளுக்கு  எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன?  எந்த அளவில் கிடைக்கின்றன? எந்தக் காலம் முதல் தொன்மையான எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன என்று கண்டறிவது எளிது. 

மொழி என்பதற்கு அந்தமொழிகளின்  சொல் ஒன்று இருக்க வேண்டும் என்ற விதியுடன்  எழுத்து என்பதையும்  சேர்த்துவிடலாம்.   

தொன்மையான, எழுத்துடன் கூடிய மூல மொழி, அந்த எழுத்து முறை வெகு சாதாரண மக்களின் வாழ்விலும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது, 
அத்துடன் இதற்குச் சான்றாக தொல்லியல் தடயங்களும் அந்தமொழியில் கல்வெட்டுக்களாகவும்  பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கிடைக்கின்றன என்றால் வேறென்ன வரையறை வேண்டும் அந்த  மொழியின் தொன்மையை, மொழியின் பரவலை, மொழியின் தாக்கத்தை உறுதிப்படுத்த?

Of the c. 100,000 inscriptions found by the Archaeological Survey of India, about 60,000 were in Tamil Nadu;[12] of these 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi; the rest were in Tamil. Over 25,000 Kannada inscriptions were unearthed in Karnataka, though an in depth study of many of these is yet to be conducted according to Hampi Kannada University Sociology department Head and Researcher Devara Kondareddy.[13]

ஒரு மொழிக்கான எழுத்து கிடைக்கும் காலம்.. அது காட்டும் அந்த மொழியின் தொன்மையை .  

 The modern world prizes critical acumen, clarity, and precision in speech and writing. These were the qualities of language and thought most extolled by the Greeks and Romans. 
என்ற இதன் அடிப்படையில் விதிகளை மீட்டுருவாக்கம் செய்யலாம், செய்துள்ளார்கள்.   ஜார்ஜ் ஹார்ட் பங்களிப்பும் அதில் ஒன்று. 

செம்மொழி வரையறை/விதி குறித்த மற்றொன்று இணைப்பில்: >>> http://www.tamilvu.org/library/kulothungan/pdf/Tamil_Among_the_Classical_Languages_of_the_World.pdf#page=54
semmozhi.JPG
source -http://www.tamilvu.org/library/kulothungan/pdf/Tamil_Among_the_Classical_Languages_of_the_World.pdf#page=54
____________________________________________________________________________

No comments:

Post a Comment