Friday, August 21, 2020

டாக்டர் .T.A.சங்கரநாராயணன்

-- வசந்த் கட்டளைக்  கைலாசம் MD


            இந்திய மருத்துவத்துறையின் வளர்ச்சியில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தென் இந்தியாவின் முக்கிய நகரமான மெட்ராஸ் நகரில் முதல் தனியார் மருத்துவமனை 1900களில்  டாக்டர் .T.A.சங்கரநாராயணன் அவர்களால் நிறுவப்பட்டது.  இதற்கான குறிப்புகள் 'சோமர்செட் பிலேனே' (Somerset Playne) எனும் பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் எழுதிய  "Southern India, Its History, People, Commerce and Industrial Resources " எனும் நூலில் பதிவிடப்பட்டுள்ளது. 

TA Sankara Narayanan3.JPG


            1913 இல் இந்தியாவிற்கு வருகை தந்த பிலேனே தனித்து உதவியாளர்களுடன் தென் இந்தியா நிலப்பரப்பை முழுவதும் பயணம் செய்து பதிவிட்டார் . அவர் The Foreign and Colonial Compiling and Publishing Company எனும் பதிப்பகம் நிறுவி தனது புத்தகங்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட Southern India, Its History, People, Commerce and Industrial Resources எனும் நூல் சென்னை வரலாற்றின் மேற்கோளாகத் திகழ்ந்து வருகிறது. இதில் தென்னிந்தியாவின் தொழில் நிறுவனங்களின் பதிவுகளில் முதல் தனியார் மருத்துவமனை நிறுவனரான டாக்டர் சங்கரநாராயணன் பற்றி விரிவாகப் பதிவிட்டிருக்கிறார். 

            மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் அறிவுசார் வல்லுநர்கள்  நிறைந்திருந்தனர். கனிமங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய அறிவால் மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணமுடிகிறது. "பொது " மருத்துவர் என்கின்ற நிலை மாறி வருகிறது. இன்றைய இளம் மருத்துவ பட்டதாரிகள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் சிறப்புப் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

TA Sankara Narayanan2.JPG


            மருத்துவர் சங்கரநாராயணன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்று 1904 ஆண்டு மருத்துவ பணியைத் துவங்கினர். காது, மூக்கு , தொண்டை சிறப்பு மருத்துவராக பணியாற்றினார். இவரது பெரும் திறமையும் புகழும் காரணமாகத் தனது  நோயாளிகளுக்குத் தனது சொந்த பொருட்செலவில் மருத்துவமனை  நிறுவும் நிலை ஏற்பட்டது. இந்த மருத்துவமனை பிரமிக்கத்தக்க வகையில் பிராட்வே நான்கு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. மிகச்சிறந்த அறிவியல் திட்டமிடல்களுடன் தற்கால மருத்துவ வசதி பெற்றிருக்கிறது. 24  உள்நோயாளி படுக்கைகள் இருந்தன. அங்கு மருத்துவம் பெற்ற நோயாளிகள் டாக்டர் சங்கரநாராயணன், உதவியாளர்கள் மற்றும் செவிலியர்களின் திறமை , சீறிய பண்பைப் பெரிதும் பாராட்டினார். மெட்ராஸில் இதைப்போன்று வேறு எந்த நிறுவனமும் இல்லை. ஏப்ரல் 1914, இதன் திறப்புவிழாவிற்கு 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர், இது அந்த கட்டிடத்தின் புகழ் மட்டும் அல்ல அதன் உரிமையாளரின் புகழும் சேர்ந்ததாகும். மருத்துவர் சங்கரநாராயணன் தனது  சொந்த பொருட்செலவில், ரூபாய் 50,000, இப்படி ஒரு மேம்பட்ட மருத்துவ வசதியைப் பாமரரும் பயன்படும் வகையில் புரிந்த சேவையால் இந்த சமுதாயத்தின் நன்றிகளுக்கு உரியவராகிறார். மருத்துவர் சங்கரநாராயணனின் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தின்  மிகவும் மதிக்கப்படும் குளத்தூர் ஜமீன்தார் ஆவர்.

            இதைப்போன்றே  திருநெல்வேலி டவுன்  இல் குளத்தூர் சமீன்தார் மருத்துவமனை ஒன்றை சொந்தச்செலவில் நிறுவினார். ஆனால் அறியப்படாத காரணங்களினால் அது செயல் பாட்டிற்கு வரவில்லை. அவரது சந்ததியினர் 5 தலைமுறைகளாக, 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்தியா மற்றும் அல்லது உலகின்  பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவை ஆற்றி வருகின்றனர்.


சான்றுகள்: 
Southern India: Its History, People, Commerce, and Industrial Resources - https://books.google.com/books?id=8WNEcgMr11kC&source=gbs_navlinks_s


TA Sankara Narayanan1.JPG

குறிப்புகள்: 
சென்னையில் முதன்முதலாகத் தனியார் மருத்துவமனையினை நிறுவிய குளத்தூர் ஜமீன் டாக்டர்.T.A.சங்கரநாராயணன் கட்டுரை ஆசிரியரான அமெரிக்க மருத்துவர். வசந்த் கட்டளைக்  கைலாசம் MD அவர்களின் தாய்வழி கொள்ளுப் பாட்டனார் ஆவார்.

No comments:

Post a Comment