Tuesday, July 12, 2016

விண்ணிலிருந்து வரும் விருந்தாளிகள்

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம். 

இன்று   (30.06.2016)    ASTEROID /METERORITE WATCH DAY. பொதுவாக விண்கற்கள் நாள் எனச் சொல்லலாம். இவை செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே சூரியனைச் சுற்றி வரும் துகள்கள். ASTEROID  என்பவை தமிழில் “சிறுகோள்” எனப்படுகின்றன. சில மீ. முதல் சில ஆயிரம் கி.மீ. வரையிலான குறுக்களவு கொண்டவை. METERORITE- விண்கற்கள் எனப்படுகின்றன. சில மீ. முதல் மைக்ரோ மி.மீ. வரையிலான அளவுள்ளவை. 

விண்கற்கள் அண்டவெளியிலிருந்து வரும் மிக முக்கிய விருந் தாளிகள். இவை வெளியூர் அல்ல, வெளிகோள்களுக்கிடையே சுற்றுபவை. இதுவரை எந்த விண்கலமும் இவற்றைக்  கொண்டுவரவில்லை. அவையாக வந்தால்தான் உண்டு. இவற்றை ஆய்வு செய்வதின் மூலம் பேரண்டத்தின் ஆதிகால நிலை பற்றிய செய்திகளை அறிய வாய்ப்புண்டு. ஆதலின் இவை கவனமாகப் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை. கடந்த 150 ஆண்டுகளாக இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GSI) விண்கற்கள் பற்றிய விபரங்களைச் சேமித்து வருகிறது. அண்மையில் INDIAN METEORITES எனும் படநூல் (COFFEE TABLE BOOK) ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில் விண்கற்கள் விழுந்த இடங்களின் வரைபடமும் வெளியாகியுள்ளது.



பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் நுழையும் போது அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக  விண்கற்கள் சிறு சிறு துண்டுகளாக  சிதறிப் போகின்றன அல்லது தீப்பிடித்து எரி நட்சத்திரங்களாக சாம்பலாகி விழுந்துபோகின்றன. இதுவரை நாம் அறிந்த விண் கற் களிலேயே பெரியது , நமீபியாவில் விழுந்த “ஹோபா” விண்கல்-சுமார் நூறு டன் எடையுள்ளது.


கடந்த  12.09.2008இல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் விழுந்த விண்கல்தான், இந்தியாவில்  விழுந்த விண்கற்களில் பெரியது. மொத்த எடை 150 கிலோ. பூமியை நெருங்கும்போது சிதறிய இந்த விண்கல் இடி இடிக்கும் ஓசையுடன் விட்டு விட்டு சுமார் ஒரு மணி நேரம் எரிமழையாய் பெய்தது.


 சுமார் ஆறு ச.கி.மீ. அளவிற்கு விண்கல் துண்டுகள் பரவிக் கிடந்தன. சாலையில் விழுந்த கற்கள்160 x 143 X 90 செ.மீ. அளவிற்குக்  குழிகளை ஏற்படுத்தின. சில இடங்களில் வீடு  மீது விழும் கற்கள்  கூரையில்  ஓட்டைப் போடுவதும் உண்டு.  


கடந்த காலங்களில் அளவிற்பெரிய விண்கற்கள் விழுந்து அதனால் ஏற்பட்ட பள்ளங்கள் இப்போது ஏரிகளாக மாறியுள்ளன.அரிசோனாவில் 1.2 கி.மீ. விட்டமுள்ள ஏரி , ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விழுந்த விண்கல்லின் தாக்கத்தால் ஏற்பட்டது என்றும், மகாராஷ்ட்ராவில் உள்ள  1.8 கி.மீ. விட்டமுள்ள லூனார் ஏரியும்
 அவ்வாறே உருவானது என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்


15.02.2008 இல் ரஷ்யாவில் பனி ஏரியில் விழுந்த செளியாபின்ஸ்க் எனும் .விண்கல் மழையின் போது 7000 வீடுகள் சேதமடைந்தன, 1500 பேர் காயமடைந்தனர்.




இந்தியாவில் விழும் விண்கற்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு  GSI இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் விழுந்த விண்கற்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.






 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 



No comments:

Post a Comment