Wednesday, July 13, 2016

காலச்சக்கரம்

-- காசுமி




யார் பேச்சையும்
கேளாமல் ஓடினால்
அது காலம்!

விளிம்பில் நின்று
கொண்டு
ஓட்டமோ ஓட்டமென
ஓடுகிறது
வாழ்க்கை!

மெல்லக் கழண்டு
மையப் பகுதிக்கு
வந்த போது
ஓட்டமில்லை.

காலம் நின்று விட்டது!

காத்திருக்கும் வேளையில்
கடலாய் பரந்திருக்கும்காலம்
கூடிப்பிணையும் போது
 காணாமல் போய் விடுகிறது!


அடிப் போடி!
வேலைக்கு ஓடும் போது
ஈதென்ன பேச்சு?

காலம் சுழல்கிறது!
 




___________________________________________________________
  
காசுமி
kasume.chan@gmail.com
https://kasumichan.wordpress.com/
___________________________________________________________

No comments:

Post a Comment