Showing posts with label சே. பானுரேகா. Show all posts
Showing posts with label சே. பானுரேகா. Show all posts

Sunday, January 23, 2022

மடியதனில் தூங்கு மின்ப மதிவதன!


- சே. பானுரேகா


மடியதனில் தூங்கு மின்ப மதிவதன! 
[மெல்லின வண்ணப்பா]
                 



பணிபுரிய வேண்டு மென்று
  பதமலரை நாடு முந்தன்
    பசுங்கிளியைத் தேடி வந்த 
                  பரந்தாம
  பலவினைக ளாலும் வென்று 
    பருவமக ளான உந்தன்
      படைமுழுதும் யாவும் வென்ற 
                    பதிதேவ
மணிதவழு மார்ப ணிந்த
  மலரணிந்த மேனி ராதை
    மனமகிழ நாடி வந்த 
                   மகிழ்மார்ப
   மனதிலெழு மாசை யன்பு
     மலைமிகவு மேலு முள்ள 
       மடியதனில் தூங்கு மின்ப 
                 மதிவதன
அணிகலனும் சூடி வந்த 
   அழகுமயி லாக நின்ற 
      அறிவுடைய மாது மிந்த
                  அதிதேவி 
   அதிசயமு மாகு மென்று(ம்)
     அடிமுதலு மேனி மின்னும்
      அருமைமிகு மாது நிந்தன்
                 அருளாள
மணிகளிடை யாடு கின்ற 
   மதுவதன மோக னுந்தன்
      மணியிதழும் பாடு மென்ற 
                 மணவாள
   மயிலிறகு மாடு மென்று
     மனமுழுது மாவ லுந்தும்
       மணிமகுட நீல வண்ண 
              மணிமாலே!


இலக்கிய மாமணி,
திருக்குறள் மாமணி,
- சே. பானுரேகா
ஆற்காடு.