Showing posts with label கவியாழி. கண்ணதாசன். Show all posts
Showing posts with label கவியாழி. கண்ணதாசன். Show all posts

Sunday, April 12, 2020

பயத்துடன் வாழப் பணித்தாயோ

பயத்துடன் வாழப் பணித்தாயோ

 ——    கவியாழி. கண்ணதாசன்


மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்ச்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்

இயற்கையை மனிதன் அழித்ததனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ

மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ

பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழப் பணித்தாயோ

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ

தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்குப்
பணமும் பொருளும் பயனின்றி-மக்களின்
பாசம் நேசம்  பகிர்ந்தாயோ

அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே

பூமியின் சுழற்சியைப் புரிய வைக்கப்
புத்துயிர் மக்களைத்  தெளிய வைக்க
நித்தமும்  நிம்மதி இழக்கச் செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிடச் செய்தாயோ



தொடர்பு: கவியாழி. கண்ணதாசன் (https://www.facebook.com/kannadasanr)