Wednesday, September 9, 2020

ஆ. கார்மேகக் கோனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து

ஆ. கார்மேகக் கோனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து 

- தேமொழி 

'அறிவு நூல் திரட்டு' (இரண்டு தொகுதிகள்), 'ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்', 'இதிகாசக் கதாவாசகம்' (இரண்டு தொகுதிகள்), 'கார்மேகக் கோனார் கட்டுரைகள்', 'கார்மேகக் கோனார் கவிதைகள்', 'கண்ணகி தேவி', 'காப்பியக் கதைகள்', 'செந்தமிழ் இலக்கியத் திரட்டு' போன்ற நூல்களையும்; மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆராய்ச்சி, மூவருலா ஆராய்ச்சி போன்ற ஆராய்ச்சி நூல்களையும்;  நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும்  எழுதியவரும்; பேராசிரியர் என்றும், ஆசான், செந்நாப்புலவர், சிறப்புரை வித்தகர் என்றும் போற்றப்பட்டவருமான; அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்  கார்மேகக் கோனார்.  

கீழுள்ளது பேராசிரியர்  கார்மேகக் கோனார்.  அவர்கள் எழுதிய   தமிழ்த்தாய் வாழ்த்து:

            தென்னருயிர் போல் வளர்த்த செந்தமிழ்த்தா யேயுனது

            பொன்னடியை யாம்வணங்கிப் புகழ்ந்துநனி வாழ்த்துதுமே

            உலகிலுள்ள மொழிகளுள்ளே உயர்தனிச்செம் மொழியாக

            இலகிமிகச் சீர்படைத்த இருந்தமிழ்த்தாய் வாழ்த்துதுமே

            கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே மொழிகளுள்ளே

            முன்றோன்றியும் மூவா மொழியரசி! வாழ்த்துதுமே

            பல்மொழிகள் தமையீன்றும் பகரும்இளம் பருவநலம்

            அல்காத தமிழ்க்கன்னி அன்னையுன்னை வாழ்த்துதுமே! 


உதவிய தளம்:

கார்மேகக் கோனார் கவிதைகள், பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார், பக்கம் 9 

https://upload.wikimedia.org/wikipedia/commons/0/03/கார்மேகக்_கோனார்_கவிதைகள்.pdf

மற்றும் கருத்து- சி. பா. சே 


No comments:

Post a Comment