Wednesday, November 18, 2020

ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள்

ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள் 

-- ரமேஷ் தண்டபாணி 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆலகிராமம் பல்லவர்கால பல்வேறு வரலாற்றுத் தடயங்களை தன்னகத்தே கொண்ட ஊர்.  இவ்வூரிலுள்ள எம கண்டேஸ்வரர் கோயில்உள்ள சதுர வடிவம் கொண்ட ஆவுடையார், பலகைகளில் செதுக்கப்பட்ட விஷ்ணு, எழுத்து பொறிப்பு உள்ள கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தின் தொன்மையான விநாயகர், சண்டிகேசுவரர், விஷ்ணு ஆகிய சிற்பங்கள் இதனை உறுதி செய்கிறது.

a.jpg

b.jpg

c.jpg

மேலும் பிடாரி கோயில் உள்ள மிகத் தொன்மையான மூத்த தேவி பலகைகளில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட அய்யனார் குதிரை நாயுடன், இரு பெண்கள் படையல் செய்வது போன்ற அமைப்பு  ஊர் அய்யனார் இவையாவும் மன்னர் காலத்தில் இவ்வூர் சிறப்பு பெற்றதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது இங்குள்ள சிற்பங்கள் பழமைக்கு மட்டுமல்லாது சிறந்த வேலைப்பாடு இருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவை இவற்றைப் பார்வையிடுவது பராமரிப்பது பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

(குறிப்பு: தொல்லியல் ஆர்வலர் சேலம் மோகன் ஐயா, தமிழ் ஆசிரியர் திரு கமலக்கண்ணன், மருத்துவர் காளிதாஸ். மருத்துவர் நிவாஸ்,  மருத்துவர் பாபு, நண்பர் ஜோதி பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து குழுவிற்கு மனமார்ந்த நன்றி.)
---






No comments:

Post a Comment