Thursday, January 10, 2019

குருச்சேத்திரப் போரில் !

——   சி. ஜெயபாரதன்




செக்கு மாடுகளை வாங்கித்
தேரில் மாட்டினேன் !
திக்குத் தெரியாமல்
வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி
வந்தது என் தேர்
கொடை ராட்டினம் போல் !
தலை சுற்றி வீழ்ந்தேன் !

கீதையை உபதேசிக்க
தேரோட்டி கிடைக்க வில்லை !
திணறித் தேடினேன்
மனமுடைந்து !
சினமுற்று விரட்டிய எனது
செக்கு மாடுகளை
எண்ணிக்
கண்ணீர் விடுகிறேன் !

இப்போது செக்கு மாடுகளைப்
பயிற்றுவிக்க
குப்பை வண்டிக் காரனை
நியமித்தேன் !
போருக்குப் போகையில்
துடித்தேன் !
நேராகப் போனது
தேரானது,
நின்று நின்று !



தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)



No comments:

Post a Comment