Wednesday, April 29, 2020

எங்கும் தமிழ்

எங்கும் தமிழ்

 ——    கவிஞர் அமீர்

நிலா வந்தாள்
நில் என்றாள்!
ஏன்? என்றேன்
கவிதை என்றாள்!

இதோ...

சோகத்தைச்  சொல்வதற்கு
சொந்தமென்று இருப்பது நீதான்...
சந்தோஷத்தில் சேர்த்தணைத்து
சிரிக்க வைப்பதும் நீதான் ...

உண்டு களித்து
உறக்கத்திலும் நீதான்...
கண்டு ரசிக்கும்
விழிப்பிலும் நீதான்...

எங்கும் நிறைந்தவன்
எதிலும் இருப்பவன்
இறைவன் என்பது பொய்!

எனக்கு
எங்கும் நிறைந்து
எதிலும் இருப்பது
நீ தான்... என்றேன்!

தன்னைத்தான் சொல்வதாக நினைத்து நிலா சிரித்தது...

என் தாயாம்
தமிழைச் சொல்கிறேன்
என்பதைப் புரியாமல்!


தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




No comments:

Post a Comment