Sunday, April 12, 2020

தேவை அன்பெனும் மருந்து


 ——    கவிஞர் அமீர்


மனிதா
உனை ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்

"ஒரு துணையில்லா தூண் இங்கு
அளவில்லா சோகத்தில்
கருணையில்லா மனிதர்களால்
வறுமை எனும் ரோகத்தில்..."

ஏன் என்று சொல்?

"கொண்டு வந்ததென்ன
கொண்டு செல்வதென்ன
ஒன்றுமில்லை என்றானபின்
இன்னுமெதற்கு கொள்கைகள்"

என்றைக்கு இதற்கு
கொள்ளி வைப்பாய்?

"வற்றிப்போய் கிடக்கும் இந்த
முற்றிய மூதாதை
இந்த தொற்று நோய்க்கு மட்டுமிங்கு
வறுமை வந்ததில்லை"

ஏன் இதனை மட்டும் வளர்க்கிறாய்?

"ஈரமும் இறக்கமும்
கழன்று எங்கு போனது?
இந்த கொடூரம்
கொரோனாவைக்காட்டிலும் கொடியது"

இன்னும்  இதனை
நான் எப்படிச் சொல்ல?

"பசி
பட்டினி போக்க
உன்னிடம் இருந்தால்தானே
 நீ கொடுப்பாய்
பரவாயில்லை விடு"

நலமா சுகமா எனும்
வார்த்தை உனக்கு உச்சரிக்கத்  தெரியவில்லையா?

அன்பும்
அணைப்பும் மட்டுமே தேடுகிறது
இது போன்ற ஜனம்...
கிடைப்பதென்னவோ
உதாசீனம்!

தனித்தோர்க்குத் தேவையானது
அன்பெனும் மருந்து...
அதனை கிள்ளிக்கொடுத்தாவது
திருந்து!




தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




No comments:

Post a Comment