Sunday, February 28, 2016

குறுந்தொகையின் அடிதொட்டு புதுக்கவிதை

-- யேசுராஜன்.


பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122

விடியலை நோக்கி
நகர்கிறது இந்த இரவு
கொக்கின் முதுகை யொத்த
ஆம்பலும் குவிந்து விட
விடியதே இரவே
என்கிறது மனம்
எப்போது வருவாய்




கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
-- குறுந்தொகை 2

தேடுதலே
வாழ்க்கையான
தேனெடுக்கும் வண்டே சொல்
ஊரினிலே நாட்டினிலே
உண்டான பூக்களிலே
என்னவளின் கூந்தலின்
நறுமணம் போல கண்டதுண்டா




நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பொருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
-- குறுந்தொகை 3

நிலம் பெரிது நீர் பெரிது
அவை மூடும் வான் பெரிதென்பார்
நிதம் எந்தன் நெஞ்சிலாடும்
நிலவொத்த நின் முகம்காணார்




நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் 
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று 
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
-- குறுந்தொகை 6

ஊரும் உலகமும் உணர்விழந்து
உருத்தெரியாமல் உறங்கிபோனதொரு- சாமத்தில் நான்
உறங்கவில்லை ஏனென
சொல்லத் தெரியவில்லை




யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே
-- குறுந்தொகை 152

மெள்ள  வளருது என்காதல்
ஆமைக்குஞ்சைப்போல் மெதுவா
மெல்ல முடியாமலும் முழுங்க முடியாமலும்
தவிக்குது ஊரு - நம் காதல்
அவிஞ்ச முட்டைபோலாகும்னு நெனப்பு
தெரிஞ்சே நினைச்சேன் உன்னை மச்சான்
விடிஞ்சா போகும் பனிபோல
துன்பம் வடிஞ்சே போகும் விரசால.




No comments:

Post a Comment