Friday, May 13, 2016

தேர்தல் திருவிழா

-- ருத்ரா இ.பரமசிவன்























திருவிழாவில்
சிறுவர்கள் காணாமல்
போவதுண்டு.
அப்படியொரு
தேர்தல் திருவிழாவில்
தொலைந்து போன‌
"ஜனநாயக சிறுவனை"
இது வரை கண்டுபிடிக்கவே
முடியவில்லை!
இந்த திருவிழாவில்
அவன் கண்டுபிடிக்கப்பட்டாலும்
அவன் அடையாளம் அழிக்கப்பட்டு
அரக்கனாய் வந்து நிற்பானோ
என்ற அச்சமே
இங்கு நிழல் காட்டுகிறது.


___________________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment