Friday, March 5, 2021

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா
*~*~*~*~*~*~*~*~*~*~*~*





புத்தகத்திருவிழா
ஒட்டுமொத்தப் புத்தகங்களும்
ஓரிடத்தில் குதித்த விழா!
எத்தனை எத்தனை நூல்கள் -
எத்தனை எத்தனை ஆட்கள்!!

குடிப்பவனுக்குக் கள் மொந்தையிலே.- நூல்
படிப்பவனுக்குத் தீனியிந்த சந்தையிலே!!

கவிதை சூழ் உலகமிது
கவிதை நூல் பெருகியது.
ஏட்டில் கிடந்த எழுத்துக்கள் எல்லாம்
நூல் வடிவாகி
நாட்டில் வலம் வர
இலக்கிய ரதத்தில் கவிதைகள் பவனி!!
மகிழ்ந்திடும் இதனால்
வாசக அவனி.

ஆலோலம் பாடிட
அனைவரும் வருக.!!

--- திரு. சபாரத்தினம்

No comments:

Post a Comment