Friday, September 4, 2020

குடும்பத் தலைவன்

குடும்பத் தலைவன்

 --  கவிஞர் அமீர்
___________________________________


ஆழிப்பேரலை போல்
அழிவுப்பேரலையில் இந்திய நாடு...
இதில்
தப்பிப்பிழைக்குமா
என்னுடைய வீடு...

பற்றிக்கொண்டு எரிகிறது
பாரதம் எனும் காடு...
என் பட்டாம் பூச்சிகளைப்
பாதுகாக்குமா என் சிறியகூடு...

யாரும் பார்க்க முடியா
சிம்மாசனத்தில் 
அழிச்சாட்டிய அரசனாய்
கொரோனா...
அதை எதிர்த்து
என் குடும்பத்தை நான் பத்திரமாய்
சேர்ப்பேனா?

தூண்கள் உடைந்து
துகள்களாகுவது போல்
இதயம்
தூள் தூளாகிறது
தினம் புதையும் உயிர்ப்பலி செய்தியால்...

அங்கொன்று
இங்கொன்று என்பதெல்லாம் போய்
எங்கெங்கும் என்றென்றும் 
என்றானது
இன்றைய நாட்கள்...

சுத்தம் சுகம் தரும்
ஊட்டம் எதிர்த்து நிற்கும்!
தொற்றை வெல்ல...
என் குடும்பத்தைக்  காக்க...
தோட்டத்துக்கோர் வேலியைப்போல்
அரணாக நான்!!!

-அமீர்-

No comments:

Post a Comment