Sunday, October 6, 2019

முதலாம் திருமொழி...

முதலாம் திருமொழி...
[எண்சீர் விருத்தம்]
—   கவின்மொழிவர்மன்


தத்தைக் குலமகள்
      மஞ்சத் துயில்கலைந்து
தையொரு மாதமும்
      மெய்யுற நீராடிக்
கற்றைக் குழலதில்    
      கங்கை புனல்வடித்துக்
கொத்து மலரினைக் 
      கொண்டையதில் சூடி
நித்தம் மணலினில்  
      முத்தம் தெருவணிந்து
நன்னறும் பூக்களால் 
      அலங்கரித்தே னனங்கதேவா
உத்தமன் பேர்பாடி 
      உம்பியையும் வேண்டேனே
உய்யவு மாங்கேலோ 
      வென்றே தொழுதனன்
சித்தமும் சேர்ந்திணையச்  
      செங்கதிர்ச் சக்கரத்தான்
சேரும் வரமருளே
      சாறுமின்பம் நான்பெறவே!



தொடர்பு:
கவிஞர். கவின்மொழிவர்மன்  (kavinmozhitamil@gmail.com) 





No comments:

Post a Comment