Sunday, May 25, 2014

தந்தி அனுப்புதல் குறித்த விளக்கம்! செத்துக்கிட கட்டுக்கட!

செத்துக் கிட கட்டுக் கட




ஆதி நாட்களில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு செய்தி ஒன்று அனுப்பிட வேண்டும் என்றால் புறாக்களின் காலில் செய்திச் சுருளைக் கட்டி அனுப்பினார்.  பின் குதிரைத் தபால் வந்தது.

1836ல் சேமுவெல் மார்ஸ் என்பவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செய்தியயை கம்பிகளின் மூலம் அனுப்பிட முடியும் என்று கண்டு பிடித்தார்.  அதெற்கென ஒரு சங்கேத மொழியையும் கண்டு பிடித்தார்.  அந்த சங்கேத மொழிதான் மார்ஸ் கோட் என்பது.  ஆங்கில எழுத்துக்கள் 26க்கும் கட், கட என்ற இரு ஒலிகளைக் கொண்டு வடிவமைத்தார்.  எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மே 24ம் தேதி அமெரிக்காவில் வாஷின்டனில் இருந்து பால்டிமோருக்கு தந்தி கொண்டு ஒரு செய்தியயை முதன் முதலாக அனுப்பினார்.  “என்ன செய்துள்ளார் இறைவன்!” என்பது அந்தச் செய்தி.

கீழுள்ள படத்தில் புள்ளி கட் என்னும் ஒலியைக் குறிக்கும்.  கட என்பதை கோடு குறிக்கும்.




இந்த கட்டுக் கடவை உண்டாக்கிடும் கருவி கீழுள்ள படத்தில் பார்க்கலாம்.




இக்கருவியின் கைப்பிடியை ஒரு நொடி அழுத்தி விட்டால் அது “கட்”. .அழுத்திய கைப்பிடியை அழுத்திய நிலயில் சில நொடிகள் பிடித்திருந்தது பின் விட்டால் அது “கட” ஆகும்.

கம்பி மூலம் ஒரு இடத்தில் இருந்து மறு முனைக்கு இது விட்டு விட்டுச் செல்லும் மின்சாரமாகச் செல்லும்.  மறு முனையில் இயங்கிடும் ஒரு மின் காந்தக் கருவி “கட்”, “கட” என்னும் ஒலிகளை எழுப்பும்.  மார்ஸ் சங்கேத மொழி பயின்றவர் அதை எழுத்துக்களாக மாற்றி செய்தியினை சேர வேண்டியவருக்கு ஆள் மூலமாக சேர்த்திடுவார்.

இந்த சேவை தான் தந்தி என்பது,  இது பெருமளவில் தபால் நிலையங்கள் வழியே இயங்கியது.  ரயில்வேயும் இதே மார்ஸ் கோடை உபயோகத்தில் கொண்டு வந்தனர்.

தந்தி சேவையை டெலி பிரின்டர்கள் எடுத்துக் கொண்டன.  கூடவே டெலெஃபோனும் அடித்தது சாவு மணி தந்திக்கு.

நம் நாட்டில் செத்துப் போன தந்தி சேவை சென்ற ஆண்டு ஜூலை பதினான்காம் தேதி புதைக்கப் பட்டது..

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் “செத்துக் கிட கட்டுக் கட”.


ஆக்கம் திரு நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

No comments:

Post a Comment