Sunday, November 10, 2019

தீர்ப்பு

தீர்ப்பு

—  ருத்ரா இ.பரமசிவன்


மண்ணில் மனிதன் வந்ததும்
வரலாறு.
மண்ணுள் மனிதன் புழுவாய் மறைவதும் 
வரலாறு.
வரலாறுகள் எழுதப்படலாம்.
வரலாறுகள் புனையப்படலாம்.
மனிதன் தன் பிம்பத்தைப் பார்க்கும்போது
அழகாய் இருக்கிறான்.
அவன் 
மொத்த மனிதர்களின் பிம்பம்
எனும் சமுதாயத்தை 
உற்று நோக்கும் போது
கோடி ஆண்டுகளுக்கும் முன்
கேட்டிருந்த‌
டைனோசார்களின் உறுமல் ஒலிகள்
எதிரொலிக்கின்றன.
அந்த ராட்சத எலும்புக்கூடுகளில்
மிச்ச சொச்சமாய் கிடக்கும்
காலத்தின் சுவடுகள்
மனிதனின் தோள்களில்
கிடக்கின்றன.
மனிதம் எனும் அடி நிழல்
அந்த அடி நிழலை அச்சடித்துத் தந்த‌
ஒளியைத் தேடிக்கொண்டிருக்கிறது.
ஆம்
இன்னும் தேடல் தொடர்கிறது.
இந்த அடர்த்தி மிகுந்த இருட்டுக்குள்
தேடலின் காலடி ஒலிகள்
இன்னும் நமக்குக்
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)



No comments:

Post a Comment