Sunday, November 17, 2019

யுகப்போர்

யுகப்போர்

——   சி. ஜெயபாரதன்


ஆகாவென் றெழுந்தது  யுகப்போர் ! 
பூகோளம்  சூடேறும் ! 
பேரளவு வெள்ளம் ஓடும் !
பேய்மழைப் பூதம்
வாய் பிளக்கும் !
கடல் உயரம் எழும் !
கடல் உஷ்ணம் ஏறும் !
வீடுகள் மூழ்கின !
வீதிகள் நதியாயின !
பாதைகள் மறைந்தன !
பாலங்கள் முறிந்தன !
நாடு, நகரம், வீடு யாவும்
ஓடும்  ஆற்றில்
ஓடங்கள் ஆயின !
சீர்வளச் செல்வம் யாவும்
நீரோட்  டத்தால்
பாழ்பட்டுப் போயின !
இயற்கையும் மனித
செயற்கையும்  சேர்ந்து  அழித்தன !
பெரு நிதி வேண்டும்
திரும்பிப் பெற.
மனிதர்
விழித்துக் கொண்டார் !
யுகப் போரைத்
தகர்க்க
ஒன்று சேர்ந்தார் !  மனத்தில்
உறுதி கொண்டார்.




தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)







No comments:

Post a Comment