Sunday, August 16, 2015

பூரண சுதந்திரம் யாருக்கு ?

--சி. ஜெயபாரதன், கனடா.







பாரதம் பெற்றது பாருக்குள்ளே

ஓரளவு சுதந்திரம் !

பூரண விடுதலை வேண்டிப்

போராடி னோம் !

பூமி இரண்டாய்ப் பிளந்தது !

பூகம்பம் நிற்காமல்

மும்மூர்த்தி  யானது

பங்களா தேசமாய் !

கட்டுப்பா டுள்ள சுதந்திரம்

கண்ணிய மானிடருக்கு !

கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,

காட்டு மிராண்டி களுக்கு !

ராவணன் சீதையைத் தூக்கி

ரதத்தில் போவான் !

பூரண சுதந்திரம் அசுரப்

போர்க்களம் !



 பஞ்ச பாண்டவர்

பகடை ஆடுவர் சூதில்

பத்தினியைப் பணயம் வைத்து !

பட்டப் பகலில் பாஞ்சாலி

பட்டுச் சேலையைப்

பலர் முன்

பற்றி இழுப்பான்

துச்சாதனன் !

கண்ணன் குளிக்கும் மாதர்

புடவை

களவாடு வான் !

பூரண  சுதந்திரம் மாந்தர் புகும்

குருச்சேத்திரம் !



மசூதியை இரவில் தகர்த்து

வேரறுப்பது

பூரண சுதந்திரம் !

பாதிரியார் உடையில்

தீ வைப்பது

வேதியர் சுதந்திரம் !

ரயில் பெட்டிகளை எரித்துச்

சவப் பெட்டி ஆக்குவது

நவகாளிச் சுதந்திரம் !

பூரண சுதந்தி ரத்தில்

மதம் பிடித்த யானைகள்

மனித நேயத்தை மிதிக்கும்.

சுதந்திர நாட்டில்

மதக் கோலத் திருவிழா 

கும்ப மேளா !



எழுத்துச் சுதந்திரத்தில் 

ஒழுக்கம், கடமை, கண்ணியம் !

விதிகளுக்கு அடங்கிய

நிதிச் சுதந்திரம் !

உரிமைத் தேர்ச்சி யில்லாத

வறுமைச் சுதந்திரம் !

கட்டவிழ்த் தோடும் முழுச் சுதந்திரம் !

பட்டு உதிரும் சுதந்திரம் !

ஒட்டு மாங்கனியாய்

நட்டு வைக்கும் சுதந்திரம் !

சுட்ட பழமா அல்லது

சுடாத பழமா

எது சுதந்திரம் ?



எட்டித் தொட முடியா

பனிச் ​சிகரத்தில்

​வேராய் மறைந் திருக்கும்

பூரண சுதந்திரம்

​சீரழிவுப் பாதை ​!
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !

போதி மரத்தடியில்

பூரண விடுதலை வேண்டித்

தவம் புரிகிறார்

போலிச் சாமியார்

புதிய பூமி​க்கு​ !

​பூரண சுதந்திரம் வேண்டுமா ?​
ஓரளவு போதும் !


_________________________________________________________

சி. ஜெயபாரதன்
jayabarathans@gmail.com
_________________________________________________________

No comments:

Post a Comment