Thursday, October 31, 2013

தீபாவளி நினைவுகள் - விசாலம்

விசாலம்

என் திருமணம் ஆனப்பின் நான் போன நகரம்  பஞ்சாபிகள் நிறைந்து வாழும்  தில்லி   தான்.    நான் கண்ட முதல் ஊரும் அதுதான் . மும்பையில்.திருமணம் ஆகும் வரை  ஆணி அடித்தாற்போல் ஒரே இடத்தில் இருந்து விட்டு முதன் முதலாக  நான் கண்ட ஊர் இது.நான் கண்ட ஊர் என்பதைவிட நான் நாற்பது வருடங்களாக பஞ்சாபியர்கள் மத்தியிலேயே இருந்து அவர்களோடு ஒன்றிப்போனவள் எனலாம் நான் குடியிருந்த வீட்டின் உடமையாளர்கள்  ஒரு சர்தார்ஜி குடும்பம் . பஞ்சாபியர்களுக்கும்   சர்தார்ஜியர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்   ஐந்து   " கே"  .இந்த  ஐந்து  'கே 'என்றால் என்ன ?

இவை தான்   கேசம் ,கிர்பான் , கடா , கச்ச ,கங்கி .  சர்தார்ஜிக்கு முக்கியமாதலைமுடியும்ஒரு சிறு கத்தியும்   கையில் கடா என்ற வளையமும்  காட்டனின் பெரிய அளவில் வரும் ஜட்டியும்   ,ஒரு சின்ன சீப்பும் எப்போதும் அவர்களுடனேயே  வைத்துக் கொள்ள வேணடிய ருட்கள்.இறந்தப்பின்னும்
 இவைகளுடனேயே உடல் எரிக்கப்படுகிறது. ஆனால் பஞ்சாபியர்களுக்கு  பஞ்சாபியர்களுக்கு இந்தப்பொருட்கள் தேவையில்லை .மற்றபடி பேசும்
மொழி . . பழக்கவழக்கங்கள் அநேகமாக ஒரே மாதிரியாகவே இருக்கிறது

வீரத்திற்குப் பஞ்சாபியர்களுக்குத்தான் முதலிடம்.பெண்களும் தங்கள் குழந்தைகளை மிக வீரமாகவே வளர்க்க  விரும்புகின்றனர் , தேசபக்தன்  சர்தார் பகத்சிங்கைத்தூக்கிலிட்டப்பிறகு  அவரது உடலின் சாம்பலை  அந்தக்கிராமத்தில் இருக்கும் எல்லா பெண்மணிகளும் தங்கள் வயிற்றில்
தடவிக்கொண்டார்களாம் .ஏன் ! தங்களுக்கும் சர்தார் பகத்சிங் மாதிரி வீரன்  பிறக்க வேண்டுமென்று ....

 தீபாவளி நேரம்     என் வீட்டு நடுவில் இருக்கும் திறந்த வெளியில்
படடாசுகட்டுகள் குவித்திருக்க ஒரு சின்ன  பாப்பா   வந்து ஒரு பெரிய பூத்திரியை  எடுத்தது . பின் தீப்பெட்டியயும் எடுத்துக்கிழித்தது  நான் பதறிப்போய் "சிம்ரித் கௌர்  தேகோ தேகோ  பேடேகோ  தேகோ " என்றேன் {பார் பார் உன் பையனைப்பார்} "குச்  நஹி ஹோதா ,கர்னே தோ " {ஒன்றும் ஆகாது செய்யட்டும் "என்று அந்த மகனை அழகுப்பார்த்தாள் அவள்.  அவனும்  பூத்ரியைப்பத்த வைத்து  மகிழ்ச்சியுடன் சுழட்டினான். நாம் நிச்சியம் இப்படிச்செய்ய விட்டிருக்க மாட்டோம்  . ஐயோ தொடாதேடா செல்லம்   கையைச்சுடும் "என்று அலறியிருப்போம்

இரண்டாவதாக அவர்கள் உழைப்புக்குச்சலிப்பதில்லை  . எந்த வேலைச்செய்யவும்   தயங்குவதில்லை .கௌரவம் பார்ப்பதில்லை . .கருமபுச்சார்  அரைக்கும் வேலையா . கோதுமைமாவு அரைப்பதா    ஸ்வெட்டர் கடையா ,மளிகைச்சாமானா .இப்படி எது இருந்தாலும் உழைப்புக்கு முதலிடம் கொடுத்து  முன்னுக்கு வருகிறார்கள்.
அத்துடன் கூட்டுக்குடும்பத்தை மிகவும்  விரும்புகிறார்கள்
ஒரு புடவைக்கடைப்போனால்  அவர்கள்து குடும்ப அங்கத்தினர்கள் பலரை  அங்குக்காணலாம்.

எத்தனை இடர் வந்தாலும் அவர்கள் மனம் தளராமல் போராட்டத்தில் எதிர் நீச்சல்  போட்டு  மீண்டு வந்துவிடுவதை நாம் மிக சகஜமாக பார்க்கமுடியும்.எதற்கும் தளராத இதயம் பஞ்சாபியர்களுக்கு
உண்டு . சைன்ய வீரர்களாக பல சர்தார்ஜிகளை நாம் எப்போதும் பார்க்கமுடிகிறது.


விருந்தோம்பல் என்பதில் இவர்கள் பெயர்ப் போனவர்கள் . யார் எந்த நேரம்  போனாலும் சாய் அல்லது லஸ்ஸி எனும் இனிப்புமோர்  கிடைக்காமல் போகாது, வெண்ணெய்   நெய் இரண்டும் மிகத்தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள் . அவர்களது உழைப்பிறகு அவை  வைப்படுகின்றன.  அவர்கள் செய்யும்   ஆலு பரோட்டா  மேத்தி பரோட்டா . கோபி பரோட்டா , பனீர் பரோட்டா என்று பலவிதமான பரோட்டோக்களைப் பார்த்தாலே   நம் நாக்கில் நீர் ஊறும்  .அத்தனைச்சுவை ,தவிர தந்தூர் ரொட்டி என்றும்  ஒன்று உண்டு . ஒரு சிறிய கிணறு போன்ற ஒன்றில் கட்டைகளைப்போட்டு எரித்து சூடாக்குகிறார்கள்  .பின் ரொட்டி மாவைப்பிசைந்து கையால் குண்டாக தட்டி அந்தத் தந்தூர் என்ற அடுப்பின்  ஓரங்களில் தடவி ஒட்டிவிடுகிறார்கள். பின் அது சூட்டில் வெந்தவுடன் ஒரு கம்பியால் அதை வெளியே எடுத்து  நெய்யைத்தடவுகிறார்கள்.   கிராமபுரத்தில்  "டாபா" என்ற   ஹோட்டலில் இந்தத் தந்தூர் அடுப்பு இருக்கும்  . அங்கு கிடைக்கும் உணவும் அதிக விலை இராது .

பஞ்சாப் நிலங்களில் முக்கியமாக கோதுமையும் பின்  பாசுமதி அரிசி என்ற  புலாவுக்குப்பெயர் போன அரிசியும்  பயிராகின்றன.  தவிர கரும்பு ,கடுகு,  சூரியகாந்தி போன்றவைகளும் பயிராக்கப்படுகின்றன . கடுகு  போட்டிருக்கும் நிலத்தைப்பார்க்க கொள்ளை அழகு.நிலத்தில்  ஒரே மஞ்சள் பூக்கள் குலுங்க அங்கு  வசந்தத்தைக் கண்டு களிக்கலாம். அத்தனை அழகு !

தவிர சைக்கிள் . மோட்டார் பார்ட்ஸ், ஸ்வெட்டர்  பால் போன்ற வியாபாரம் கொண்ட  கம்பெனிகள் சக்கைப்பொடு போடுகின்றன.

திருமணத்தை எடுத்துக்கொண்டால்   முதல் நாள் மெஹந்தி .சகுன் என்ற இரு  நிகழ்சிகள் நடக்கும் இதில் மணப்பெண்ணின் தோழிகள் 'கித்தா'என்ற நடனத்தை மாறி  மாறி ஆடுவார்கள். பிள்ளை வீட்டில் மாப்பிளைக்கு மங்கல ஸ்னானம் நடக்கும் ,பின் ஆண்கள்   பங்கரா' என்ற நடனத்தை ஆடுவார்கள் .பல்லே பல்லே  balle balle  என்ற சொல்  பலமுறை வரும்.

பின் நடப்பது திருமணம் மணப்பந்தலின்  எரியும் பலவித வண்ண விளக்குகள், கீழே விரித்திருக்கும்  கம்பளம் எல்லாம் பார்த்தால்  எங்கே சுவர்கத்திற்கு வந்துவிட்டதுபோல் தோன்றும்.அவ்வளவு சிலவழித்து ஜோடிப்பார்கள் மாலை ரிசப்ஷனில்   மாப்பிள்ளை குதிரையில் வருவார் .அவர் முகம்  மல்லிகைப்பூ சரத்தினால் மூடப்பட்டிருக்கும் .. பேண்டு வாத்தியங்களுடன்  சினிமா பாடல்கள் பாடும்  குழுவும்  ஒரு வண்டியில் வரும் மாப்பிள்ளை உறவினர்கள் திருமண மண்டபத்தின் வாயிலில் பெண்வீட்டு  உறவினர்களைச் சந்திப்பார்கள் .இதற்கு 'மில்னி' என்று பெயர் .பின் 'சாஜன் ஆயே' என்ற ஒரு பாட்டுடன் இரு சம்பந்திகளும்  ஒருவர்க்கொருவர் மாலை அணிவித்து கொள்வார்கள். பின்   இரு தரப்பினரில்  இருக்கும் மாமாக்கள் .சகோதரர்கள் சித்தப்பா பெரிப்பாக்கள் என்று மாலை அணிவித்தப்பின் உள்ளே நுழைவார்கள்
பின் என்ன்! பெரிய அழகான சிம்மாசனத்தில் சுந்தரியும் சுந்தரனும் அமர பரிசு வழங்கும் படலம்  நடைப்பெறும் .கலயாணத்திற்கு  முன் இருந்த  பெண்ணா இவள் என்று  மலைத்துப்போகும்படி மேக் அப் இருக்கும். ஒரு  சினிமாஸ்டார் போல்  மணப்பெண்  அமர்ந்திருப்பாள். முழுவதும் சரிகையால் இசைக்கப்பட்ட ' லெஹெங்கா' என்னும் பெரிய பாவடை சிவப்பு கலரிலோ அல்லது பிங்க் கலரிலோ உடுத்து மேலே துப்பட்டாவை தன் தலையையும் மூடியபடி அமர்ந்திருப்பாள் மணப்பெண் .  அவள் கையில் மெஹெந்தி
டிசைன் கண்ணைப்பறிக்கும் . இபோதெல்லாம் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும்  சகஜமாக பேசியபடி அமர்ந்திருக்கின்றனர் , இந்த நேரத்தில்  டின்னர் களைக்கட்டும் வெஜ் என்ன  நான்வெஜ் என்ன என்று எதை எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் பலவிதமான  உணவுகள்   வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்  ,மூங்தால் கி அல்வாவும்  ஐஸ்கிரீமும் நிச்சியம் இருக்கும்.

பின் இரவில் அவர்கள் திருமணம் நடக்கும் சிலசமயம் இரவு 12 லிருந்து  விடிகாலை வரை எப்போது வேண்டுமானலும்  நடக்கும்.

இதில் சர்தார்ஜியாக இருந்தால் குருகிரந்த்சாஹிப் புத்தகத்தின் முன்
மூன்றுமுறை வலம் வந்து    சில கட்டளைகளை சரிவர  அனுசரிக்கும் சபதம் எடுத்தப்பின் முடிவடையும்   .இதுவே பஞ்சாபி ஹிந்துவாக இருந்தால் நடுவில் அக்னி வைத்து மூன்று முறை வலம் வந்து  சப்தபதியும் நடக்கும் .
மறு நாள் விதாயி {பிதாயி] என்று பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும்  நிகழ்ச்சி .அதில் கண்கலங்காமல் ஒருவரும் இருக்கமாட்டார்கள் .பெண் முதலில் தன் அம்மாவை அணைத்து பின் .அப்பா ,தன் சகோதர சகோதரியை அணைத்து அழும் காட்சி மனதை உருக்கி விடும்   இதற்கென்று தனிப்பட்ட   பாடல்களும் உண்டு.

விழாக்கள் என்று எடுத்துக்கொண்டால் லோரி,  மகர சங்கராந்தி . ,ஏப்ரல் 14ல் வரும் பைசாகி போன்றவைகள்   மிக விசேஷமாக கொண்டாடப்படுகின்றன
பைசாகியின் போது குருத்வாரா போன்ற இடத்தில் அன்னதானம் விடாமல் நடக்கிறது. விவசாயிகளுக்கு இது மிக முக்கியமான பண்டிகை .

ஹோலிகாவை எரித்த ஹோலி என்ற வண்ணம் நிறைந்த   கொண்டாட்டமும் மிகச்சிறப்பாக நடக்கும் இதில் ஜாதி பேதமின்றி  ஏழை ,பணக்காரரின்றி  அன்பை மட்டும் கொண்டே இந்தப்பண்டிகை  நடக்கிறது.

ராக்கி எனும் பண்டிகை சகோதர்களின் க்ஷேமத்திற்காகவும் ,கர்வாசௌத் எனும்  விரதம்   கணவனின் நீண்ட ஆயுளுக்கும்  வளமான வாழ்க்கைக்கும்  விரதமாக நடத்தபடுகிறது.  நம்முடைய காரடையான் நோம்பு  விரதம்  போல் ...........

நவராத்திரியும் தீபாவளியும் வரும் நேரத்தில் எல்லா வியாபாரிகளும்
சேர்ந்து 'பகவதி ஜாகரண் "என்று ஒன்றை நடத்துகிறார்கள்  அதில் அம்பாள்  சிலையைஅலங்கரித்து பெரிய  தெருவின் நடுவில் வைத்து   பெரிய பந்தல் போட்டு  எல்லோரும் அமரும்படி விரிப்பும் விரிக்கிறார்கள். பின் காலையிலிருந்து மறுநாள் காலைவரை விடாமல் பூஜையும் பஜனும் நடக்கிறது   இதற்கு பாட பெரிய இசைக்கவிஞரும் பிரமுகரும்  பங்கு ஏற்கின்றனர், ஒலிபெருக்கு அலறுவதால் வெகுதூரம் வரை இந்த நிகழ்ச்சியைக் கேட்கமுடிகிறது. .தீபாவளியின் போது குருநானக்ஜியின் பிறந்த நாளும்  'குருபிரப்' என்ற  பெயரில்  வருகிறது  எங்கும் அகல்விளக்கு ஏற்றப்பட்டு   ஊரே ஜகஜோதியாகி   நம்மை பரவசப்படுத்துகிறது .
பஞ்சாபியர்கள் அனுமார்  கணேஷ் அம்பாள். சிவன் கிருஷ்ணன் ராதா  என்று பூசிக்கின்றனர் முருகனைப்பற்றி அதிகமாக தெரியவில்லை தில்லியில் மலாய்மந்திர் என்ற முருகன் கோயில் நம் சுவாமிமலை கோயில் போல் இருக்கிறது இப்போதெல்லாம் பல   பஞ்சாபியர்களும் சீக்கியர்களும் இந்தக்கோயிலுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.ஒரு சீக்கியர் இந்தகோயிலில் கமிட்டிமெம்பராக இருக்கிறார் .அவர் கந்தரலங்காரம் மிகச்சரளமாக சொல்லுவதைக்கேட்டிருக்கிறேன் .

திருமதி இந்திராகாந்தி அவர்களின் மரணம் போது நாங்கள் பத்து நாட்கள் ஒரு சீக்கியகுடும்பத்தை எங்கள் வீட்டில் ஒளித்து வைத்துக்கொண்டதை மறக்க முடியாது .அந்தக்குடும்பத்தினரும் எங்களுக்குப்பலவிதமாக பாசத்துடன் உதவி புரிந்திருக்கின்றனர் .'யாரும் ஊரே யாவரும் கேளீர் . என்று வாழ வாழ்க்கை ஆனந்தமே .

No comments:

Post a Comment