Sunday, January 15, 2017

தமிழ்த்தாய் வாழ்த்து


 
 
தமிழ்த்தாய் வாழ்த்து


கற்றறி புலவருள் மகிழா களியா 
நிச்சலு முறைதரு கனியே! சுவையே! 
கட்டி விளையுமொரு கழையே! அளியேம்-உளமூறும்

கட்செவி யணியிறை யெனவே முதிரா 
முத்தமிழ் துறைவளர் கடலே! மலையே! 
கற்பக  மெனவிழை வனவே தருவாய்-பெருதேவி!

உற்றன விடரவை களையா மறவா 
திச் சிறுவர் கடமை யயலார் பழியா
துச்சமி கவடைய வருள்வாய் கலையே-இணையாக

ஒத்தவெ னுமொழிகள் விழவே யுலவா 
தித்தரை யதுதனில் நிலையா வளர்வாய்! 
ஒப்பிலை யெனநனி புகழ்வார் மொழிநூல்-உரைகாரர்

சுற்றிய   வுடைதிரு மணிமே கலையே 
முச்சியி லணிவது சிதறா மணியே 
தொக்கபல் சிறுவர்கள் பெறவே தருவாய்-கலைமானே! 

தொத்தும லர்களணி பொழில்சூழ் வளமார் 
தெற்குறு மலைபெறு குறுமா முனிவோன் 
சொற்கு மிகமகிழு மொழியா மணமார்- சிறுகாலே! 

தெற்றன மறைவளர் குறளா ரமையே! 
எட்டலர் தொகைவிரி மலரார் கொடியே!
செப்புற நிலமக டனிமா மகளே -தமிழாயே!

செப்ப முடையவர்கள் உளமே எனவே 
இக்கழகமு முயர் நலமே யுறவே 
திக்குள வரைஇறை என வாழியவே-இனிதாயே!


மு. வே. மா. வீ. உலகவூழியன், 
வாடாக்கரங்தை

[ஆண்டு - 1926 தை/ஜனவரி]
(பக்கம் 369)
____________________________________________

தமிழ்ப் பொழில்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
துணர்: 1  ❖ குரோதன - தை  ❖ மலர்: 10
____________________________________________

91 ஆண்டுகளுக்கு  முன்னர் [ஆண்டு - 1926, தை/ஜனவரி]  மு. வே. மா. வீ. உலகவூழியன் அவர்கள் எழுதி தமிழ்ப் பொழிலில் வெளியான தமிழ்த்தாய் வாழ்த்து.

1 comment: