Thursday, September 11, 2014

பஞ்சலோக விக்ரஹம் செய்வது எப்படி? பகுதி 2

பாகம் 2.

உலகிலேயே மிகப் பெரிய சிவன் நடராஜன் விக்ரகத்தை  இந்த ராஜன் இன்டஸ்ட்ரி நிறுவனத்தினர்   செய்திருக்கிறார்கள், அந்த விக்ரகம் இப்போது ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவாவில் உள்ள ப்ரூஸ்லன்ட் என்னும் இடத்தில்  அட்டாமிக் காஸ்மிக் சென்டரில்  நியூக்ளியர்  அட்டாமிக் ஆராய்ச்சி செய்கிறார்கள். அங்கே இந்த நடராஜர் விக்ரகத்தை வைத்திருக்கிறார்கள். அங்கே  ஏன்  வைத்திருக்கிறார்களென்றால்  இந்த நடராஜரின் நடனத்துக்கும்  அணுவுக்கும்  தொடர்பு உள்ளது.அங்கே அணுவை எப்படி உருவாக்குவது, எப்படி அழிப்பது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். அதற்கு இந்த நடராஜரின் நர்த்தன அமைப்பு முறையாக ஒத்துப் போகிறது  என்று நிரூபித்திருக்கிறார்கள். அதற்காக இந்திய அரசாங்கமே இந்த சிலையை செய்யச்சொல்லி  அங்கே வைத்திருக்கிறார்கள்  என்று ஒரு அருமையான செய்தியைச் சொன்னார் திரு சுரேஷ் அவர்கள்.
அவர்களின் தொழில் நுணுக்கத்தைப் பற்றிப் பேசும்போது அவர் சொல்கிறார் டெல்லியிலே உள்ள மொரதாபாத் என்னும் இடத்திலே இப்படிப்பட்ட விக்ரகங்களைக் கொண்டு சென்று அந்த விக்ரகத்தை பாகம் பாகமாக வெட்டி ப்ரதி எடுத்து அப்படியே மோல்டிங் முறையில் செய்து  விற்கிறார்கள் என்று.  விவரம் தெரியாத பலர் அவர்களிடம் விக்ரகங்களை வாங்கி ஏமாறுகிறார்கள். ஆனால் விக்ரகங்களின் நுணுக்கம் தெரிந்தோர் இவரிடம் வந்து செய்யச்சொல்லி எடுத்துப் போகிறார்கள் என்கிறார் இவர்.

விக்ரகம் செய்யும் முன்னர் அந்த விக்ரகம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் பின்னர்தான் விக்ரகம் செய்யத் தொடங்குவார்கள்.ஒவ்வொரு விக்ரகத்தின் கைகளும்  அந்தந்த விக்ரகத்துக்கு ஏற்ப என்ன முத்திரையைத் தாங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அந்த முத்திரைக்கேற்ப விரல்களை அமைக்கவேண்டும்.
அபய ஹஸ்தம் என்றால்  உள்ளங்கை  அந்த விக்ரகத்தை பார்ப்பவர்களுக்கு ஆசி வழங்குவது போல்   ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் வரை ஒன்றாக இணைந்து மேல் நோக்கியும் , கட்டை விரல் பக்கவாட்டில் சற்றே விலகியோ அல்லது சேர்ந்தோ இருக்கவேண்டும்
நர்தன சிவன் என்றால் கால்கள் அந்த நர்த்தனத்தில் எந்த பாகத்தைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்து  கால்கள் மே நோக்கியோ, அல்லது ஒரு கால் மடித்து மறுகால் அகலமாக  தரையைத் தொடுவது போலவோ அமைக்கவேண்டும்.
விரித்த செஞ்சடையோடு ஆக்ரோஷ நடனம் என்றால் அதற்கு  கால்கள், கைகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து நடன முத்திரைகளை முறையாக புரிந்துகொண்டு அதற்கேற்ப    அந்தந்த முத்திரைகளை அமைப்பது பொருத்தமனாது .
ஆலிலை மேல் படுத்துக் கிடக்கும் கிருஷ்ணன் என்றால்  அந்தக் கிருஷ்ணனின்  பாதம் எப்படி இருக்க வேண்டும், கைகள் எப்படி இருக்க வேண்டும், அல்லது  காலிங்க நர்த்தனத்தில்  இருக்கும் கிருஷ்ணன் என்றால் கால்களும்  ,கைகளும்   அங்க அசைவுகளின் வடிவம்    நடன பாவத்துக்கேற்ப ஒத்துப் போவது போல் அமைக்க வேண்டும்.
ஆக இந்த விக்ரகம் செய்வோருக்கு  மிக நுணுக்கமாக  கூர்ந்து கவனித்து வடிவங்களை அமைக்க பொறுமையும்  நுணுக்கமும் வேண்டும்.

முத்திரைகள் என்றால் அவற்றில் யோக முத்திரைகள் , நாட்டிய  முத்திரைகள் உண்டு,
.
யோக முத்திரைகள் : . கை விரல்----குறிக்கும் மூலம்
1. பெரு விரல்---    சூரியன்
2. ஆட்காட்டி விரல்---     காற்று
3.நடு விரல்--- ஆகாயம் (வானம்)
4.  மோதிர விரல்--- மண்
5. சுண்டு விரல்--- நீர்
என்று நம்முடைய ஐந்து விரல்களும்  ஐந்து பூதங்களாகிய பஞ்ச பூதங்களோடு  தொடர்புடயவையே.

நம் உடல் நலக் குறைவு வரும்போது  அந்தக் குறையை நீக்க இந்த விரல்களைப் பயன்படுத்தி எந்த விரலோடு  எந்த விரலை சேர்த்துப் பிடித்தால் அந்த நோய் தீரும்  என்று தெரிந்து கொண்டு  ,அல்லது பஞ்ச பூதங்களில்  எந்த பூதத்தை எந்த பூதத்தோடு சேர்த்து வைத்தால் நோய் தீரும் என்று தெரிந்துகொன்டு அதற்கேற்ப  முத்திரைகளை அமைத்து நிவாரணம் பெறுவது யோக முத்திரையின் சிறப்பு.
நாட்டிய முத்திரைகள்:
நாட்டிய முத்திரைகள் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்துக்கு  ஏற்ப  அந்தப் பாத்திரம் செயல்படும் கதைக்கேற்ப அமையவேண்டும். நட்டுவனாருக்கு இந்த முத்திரைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டியம் ஆடுவோருக்கு அவர் சரியான முத்திரைகளை, அடவுகளை சொல்லித்தர முடியும்.  நடன முத்திரையில் பாவங்களைக் காட்ட எந்த விரலோடு எந்த விரலை சேர்த்தால் அந்தக் குறிப்பிட்ட பாவம் வரும் என்று  தெரிந்துகொண்டு  அமைத்து பாவம் காட்டி  நடனமாடுவது.
1.பதாகம்    கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல்.  
2.திரிப்பதாகம்      மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம்  பதாகத்தில் மோதிர விரலை மடித்தல்.
3.அர்த்தப்பதாகம்   அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.  
4.கர்த்தரீமுகம்     கத்தரிக்கோல்      திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல்.  
5.மயூரம்     மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.  
6.அர்த்தச்சந்திரன்   அரைச்சந்திரன்     பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.  
7.அராளம்    வளைந்தது  சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
8.சுகதுண்டம் கிளி மூக்கு  பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.  
9.முட்டி(முஷ்டி)    முட்டிகை   அனைத்து விரல்களையும் பொத்துதல்.
10.சிகரம்     உச்சி  முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல்.
11.கபித்தம்   விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
12.கடகாமுகம்      வளையின் வாய்   நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல்.
13.சூசி ஊசி  முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல்.
14.சந்திரகலா பிறைச்சந்திரன்     சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல்.
15.பத்மகோசம்     தாமரை மொட்டு   கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல்.
16.சர்ப்பசீசம் பாம்பின் படம்     பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல்.  
17.மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல்.
18.சிம்மமுகம்      சிங்கத்தின் முகம்   நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
19.காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது   மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
20.அலபத்மம் மலர்ந்த தாமரை   சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல்.
21.சதுரம்    சாதூர்யம்   மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
22.பிரமறம்  வண்டு      ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
23.கம்சாசியம்      அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
24.கம்சபக்சம் அன்னத்தின் சிறகு  மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல்.
25.சம்தம்சம் இடுக்கி      விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
26.முகுளம்  மொட்டு     விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
27.தாம்ரசூடம்      சேவல்      மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல்.
28.திரிசூலம்  சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல்.    ஆகிய முத்திரைகள் உள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பஞ்சலோகம்  என்றால் ஐந்து உலோகங்கள்
அதுபோல் ஐந்து என்னும் சிறப்பானவை வேறு என்னென்ன  இருக்கின்றன என்று ஆராய்ந்தேன். அவற்றில் விக்கிபீடியாவில், மற்றும்  இணையத்தில்  கிடைத்த விவரங்களைக் கீழே எழுதியுள்ளேன்.
பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்
பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்
பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)
பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்
பஞ்சலிங்கத் தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.
பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்
பஞ்ச கங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.
பஞ்சாங்கம் –     திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                      
பஞ்ச ரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                                                                                                      
பஞ்ச குமாரர்கள் –     விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.                                                                                                            
பஞ்ச நந்திகள் –  போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,                                                              



பஞ்ச மூர்த்திகள் –  விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.                                                                                                                
பஞ்சாபிஷேகம் –  வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை       பொருட்கள் கலந்த கந்த தோதகம்.                                                          
பஞ்ச பல்லவம் –    அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.                                                                                                  
பஞ்ச இலைகள் –   வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.                                                                                                                  
பஞ்ச உற்சவம் –   நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.                                                    
பஞ்ச பருவ உற்சவம் – அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.                                                                                          
                                                                     
பஞ்ச சபைகள் –    ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.                                                        
பஞ்ச ஆரண்யம் –     உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,  அர்த்தஜாமம்.                                                
பஞ்ச முகங்கள் (சிவன்)- தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்                                              
பஞ்ச முகங்கள் (காயத்திரி)- பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.                                                                                          
பஞ்ச மாலைகள் –   இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.                                                                    
பஞ்சமா யக்ஞம் –    பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.                                        
பஞ்ச ரத்தினங்கள் –  வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
                                                       
பஞ்ச தந்திரங்கள் –  மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.                                                    
பஞ்ச வர்ணங்கள் – வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.                                                                                                                
பஞ்ச ஈஸ்வரர்கள் –  பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்                                                                                                            
பஞ்ச கன்னியர்கள் –  அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.
                                                               
 பஞ்ச பாண்டவர்கள் – தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.
                                                               
 பஞ்ச ஹோமங்கள் –      கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.                                            
பஞ்ச சுத்திகள் –  ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.                                                        
பஞ்ச கோசம் –     அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.                        
பஞ்ச காவ்யம் (பசு)-     பால், தயிர், நெய், கோமியம், சாணம்.                                                              
பஞ்ச லோகம் –   தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.                                                                                                                      
பஞ்ச ஜீவநதிகள் –  ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.                                                              
பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) – சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.                                                                        
பஞ்ச நிலங்கள் –   குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை                                                                                                                        .பஞ்ச காப்பியங்கள் – மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.                            
பஞ்சமா பாதகங்கள் – காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.                                                                  
பஞ்ச சயனம் –   அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்                                                                                                                        
பஞ்ச புராண ஆசிரியர்கள் –  நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.                                                                                          
 பஞ்சராத்ரங்கள், பஞ்சாங்கம், பஞ்சமுத்திரைகள் பஞ்சபட்ஷி சாஸ்திரம் பஞ்ச புராணம், பஞ்சலிங்கம், பஞ்சமுகக் குத்துவிளக்கு, பஞ்சரத்தினக் கீர்த்தனைகள்
ஆகமொத்தம் பஞ்ச பூதங்கள்  ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உள்ளே பொருந்தி  பஞ்சபூதங்கள் இல்லாமல் இந்த ப்ரப்ஞ்சத்தில் எதுவுமே இல்லை என்று நிரூபித்த வண்ணமாக இருக்கிறது.
பஞ்சலோக விக்ரகங்கள் செய்யும் முறை பாகம் 2  காணொளியைக் கண்டு மகிழ
https://www.youtube.com/watch?v=zWQ_U72P8-4

அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments:

Post a Comment