Showing posts with label தீபிகா சுரேஷ். Show all posts
Showing posts with label தீபிகா சுரேஷ். Show all posts

Friday, March 11, 2022

பெண்களாய் வாழ்வதே சாதனை தான்



தொலைந்து போன பால்யம் 
தூக்கி எறியப்பட்ட கனவுகள்
இளமையில் துரத்திய வறுமை
விதியென வாய்த்த வாழ்க்கை 
உரிமை இல்லா உறவுகள் 
உண்மை இல்லா உணர்வுகள்
புரிதல் இல்லா புணர்வுகள்
அடைகாக்கும் சமையலறை
அடுத்த சிறையாய் படுக்கையறை
அலுவலகத்தில் அசடுகள்
அங்கும் அக்னி பரீட்சை தான்
உடல்மொழி தனிக்கதை
உளவியலானது விடுகதை
பிள்ளை வளர்ப்பு பெருங்கதை
 குடும்பமது போர்க்களம்
சுயம் மறந்து நாட்களாக 
நட்புகள் ஏது சிந்தையில் 
பெரியாரும் பாரதியும்
பெருமூச்சிறைக்கச் செய்ய 
வாசிக்கப் பழகியவள் 
எழுதத் தொடங்கினாள் 
எழுத்துகள் தந்தது விடுதலை எண்ணங்களில் எழுச்சி
 வேர்களைத்தேடிய எழுத்தில் 
அவளை அவளே கண்டெடுத்தாள் 
ஆறாம் விரலாய் அவள் பேனாவும்
 அஞ்சாத அறமுறைத்தது.
பெண்களாய் வாழ்வதே சாதனை தான்
அனுதினம் உன்னை நீ கொண்டாடு

-- தீபிகா  சுரேஷ்