Monday, April 13, 2015

பிலிப்பைனின் தங்கத் தாரா

--செல்வன்.


இன்று சிகாகோவின் புகழ்பெற்ற பீல்ட் மியூசியத்தில் இந்த தங்கதாரா சிலையைக்கண்டேன்.
13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலை முழுக்க தங்கத்தால் ஆனது. சுமார் 1.86 கிலோ தங்கத்தால் ஆன இச்சிலை மலேயாவின் மகாஜத் அரச வம்சாவளியை சேர்ந்ததாக கருதபடுகிறது. இச்சிலையில் இருக்கும் தாரா எனும் தேவி பவுத்தத்தின் ஒரே பெண் போதிசத்வர். எடுத்த காரியத்தில் வெற்றி அளிக்கவல்ல தேவதை.
 
தாரா வட இந்தியாவில் துர்க்கையின் வடிவமாக கருதப்படுபவர். பவுத்தம் அதன்பின் இவரை உள்வாங்கியது.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிலிப்பைன்ஸில் ஆற்றோரம் ஒரு எளிய பெண்மணி இத்தங்கதாரா சிலையை கண்டெடுத்தார். அதன்பின் அந்த மாகாண பிலிப்பைன்ஸ் கவர்னர் கைக்கு இச்சிலை சென்றது. பிலிப்பைன்ஸ் கவர்னர் ஒரு தேங்காய் கம்பனிக்கு பட்ட கடனுக்கான இச்சிலையை கைமாற்றி விட்டார். அத்தேங்காய் கம்பனி இதை எக்ஸிபிஷனில் வைக்க பீல்ட் மியூஸிய கியூரேட்டரின் மனைவி 4000 பெசோவுக்கு (பிலிப்பைன் பணம்) 19208 வாக்கில் இதை வாங்கி சிகாகோ கொண்டுவந்தார்

பிலிப்பைன்ஸின் ஒப்பற்ற தேசிய சின்னமாக கருதப்படும் இச்சிலை இப்படி சிகாகோ நகருக்கு வந்து சேர்ந்தது. பிலிப்பைன்ஸில் இதன் மாதிரியை எக்ஸிபிஷனில் வைத்துள்ளார்கள்.


பீல்ட் மிச்யுசியத்தில் 19ம் நூற்றான்டை சேர்ந்த பீஜாப்பூர் நகை ஒன்றையும் காண நேர்ந்தது. ஆலிலை கண்ணன் சிரித்தபடி அதில் வீற்றிருந்தான்

No comments:

Post a Comment