Pages

Wednesday, September 25, 2019

கீழடி

—  ருத்ரா இ.பரமசிவன்


தமிழா!
உன் காலடி கீழடியில்
உன் இமயம்.
பனை ஏடுகள்
பாதி திறந்தன.
பானை ஓடுகள்
மீதி திறந்தன.
இவர் மீறல்கள்
உன் கீறல்களில்
உடைந்து போயின.
உன் தன்மையே
உன் தொன்மை தான்.
நீ தந்த சமக்கிருதமா
உனக்கு சமாதி ஆவது?

தமிழா!
இப்போதாவது விழி.
இது தான் உன் ஒளி.
இதுவே உன் வழி.
அர்ச்சனை மந்திரங்கள்
இப்போதாவது மற!
இல்லெனில்
உன் வீடு உனக்கில்லை.
உன் கூடும் உனக்கில்லை.
பிறகு
ஏது சிறகு?

ஈசன்கள் தேடி
ஈசல்கள் ஆனாய்.
நீ கட்டிய
பெரும் கோவில்களில்
வெறும்
படிக்கட்டுகளே நீ!
சிந்து வெளி
வெளிச்சம்
உனக்கு உண்டு.
சமக்கிருதம் எனும்
"சிந்துபாத்"கிழவனா
உன் தோளில் ?
அந்தக் கீறலில்
ஒரு "அந்துவன்"உண்டு.
நம் கலித்தொகைக்
கவிஞன்
"நல் அந்துவனும்"
அதில் உண்டு.

தமிழா
இதைக்கண்டு
அறி !
இந்த நாடு எனும்
பட்டா
உனக்கே உண்டு
அறி !




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)



No comments:

Post a Comment