Pages

Wednesday, September 25, 2019

தொல்லியலின் அழகடி ...கீழடி


 ——    கவிஞர் அமீர்


ஆதியிலே பிறந்த மொழி
தமிழ் மொழி!
அதை
அகழ்வாய்வில் சொல்லுதடி
கீழடி!

கலாச்சாரம்
நாகரீகம்
கொடிபிடித்து முன்னெடுத்த 
தமிழ்மொழி!
அதைச் சுவரினிலே காட்டுதடி
ஈரடி வாசகத்தில் 
அதே கீழடி!

பொதிகையிலே பிறந்தது
வைகையிலே வளர்ந்தது
தொல்லுலகில்
முதன்மையானது...
அது கீழடியில் வெளிச்சமானது...

தமிழுக்கு நிகரேது
தமிழருக்குக் குறையேது
எனும் வெண்பா கேளடி...
இன்னும்
மதம்
இனம்
வெறி
அடையாளக் குறியில்லா கீழடி!
இது
தொல்லியலின் அழகடி
தொன்மைக்கு பெருமையடி!

தமிழ்ச்சாமியின்
காலடி மண்ணெடுத்து
நெற்றியிலே 
பொட்டு வைக்க வாடி
அதற்கு ஏற்ற இடம் 
இந்த கீழடி!


---





No comments:

Post a Comment