Pages

Saturday, April 4, 2020

மாயக்கைகள் யாதடா ?


 ——    தமிழ்மைந்தன் சரவணன்


ஒடி ஒடி உழைச்ச ஜனம்
ஓஞ்சுபோயி கெடக்குதையா!
அந்த உழைப்பின் உன்னதங்களின்
வயிறு இப்ப காஞ்சு கெடக்குதையா

உல்லாசமாய் சுத்தி வந்த
செல்வ சீமான்களின் மனம்
ஓரிடத்தில் அடங்க மறுத்து
புழுங்கி தவிக்குதய்யா !

மதம் பார்த்து ஜாதி பார்த்து
வருவதில்லை வியாதிகள்
தீர்ந்திடுமா ஒரு சிலரின்
மனவியாதிகள்?

ஊர் அடங்கு சட்டம் என்று அறிவிக்கின்றார்
ஒட்டுமொத்த உலகடங்கி போனதடா!

கலகங்கள் இல்லாத உலகம் கேட்டோம்
அமைதியான பூமியைக் கேட்டோம்
ஏகன் இறைவனிடம் கேட்டது ஏகாந்த அமைதி
மயான அமைதியல்லவா எங்கும் மண்டிக்கிடக்கிறது ?

ஓயாமல் சுழல்கின்ற பூமியின் இயக்கத்தை
நிறுத்த துடிக்கும் மாயக்கைகள் யாதடா ?
எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளே
நேரில் தோன்றி
பதிலை நீயும் எமக்கு கூறடா !



தொடர்பு:
தமிழ்மைந்தன் சரவணன் (saravananmetha@gmail.com)



No comments:

Post a Comment