Pages

Saturday, April 13, 2019

அறிவும் உணர்ச்சியும்



——    ரவி அண்ணாசாமி 




அறிவொருபுறமு ணர்ச்சியோர்புறம்
அடிதடிஎன்னுள்ளும் அன்றாடம் நிகழும்
உணர்ச்சியோர் பேதையென் றறிவு கூறும்
அறிவே நீ பேடியெனுணர்ச்சி கூவும்
அந்தந்த நொடிகளில் ஒன்றே வெல்லும்

அறிவதுவும் உணர்ச்சியதும் பொருள்வேறல்ல
அடித்தளத்தில் இருபொருளும் ஒன்றாம் உணர்வாம்
தெரியும் பொருள் தெளிந்தபின்பே அறிவாய் மாறும்
அறியப்படா நிகழ்வு தோன்றில் உணர்ச்சி ஓங்கும்
ஆண்பெண்ணாய்க் கூடுமிவை ஆக்கம் சேர்க்கும்
அடக்குமுறை ஆட்சி பெற்றால் அழிவே மிஞ்சும்

இரண்டிலும் உணர்ச்சியே அறிவிலும் மேலாம்
நிகழுணர்வின் வெளிப்பாடாம் பயனும் நேராம் - அறிவை
அடக்குதலும் அனுமதிப்பும் அதனின் செயலாம்
உணர்ச்சியை உள்வாங்கி உணர்வில் நின்றால்
உண்மைப்பொருள் உணர்வாகி அறிவாய்த் தோன்றும்
உணர்ச்சியும் காதல்கொண்டறிவை நோக்கும்






தொடர்பு:  ரவி அண்ணாசாமி  (ravi.annaswamy@gmail.com)







No comments:

Post a Comment