Pages

Thursday, March 22, 2018

குறிப்பறிதல்

——    பழமைபேசி



சிந்திலுப்பு பள்ளத்து மேவெள்ளத்துல
சிக்கிகிட்ட  அல்லாரும்
ஊரு வந்து சேந்துட்டாங்க!
அல்லாரும்
ஊரு வந்து சேந்துட்டாங்க!!
கலைஞ்சமுடி கலைஞ்சபடி
சின்னக்கனகா திரும்பத்திரும்ப
மெட்டுப்பிறழாமல்
ஓயாமற் கொள்ளாமல்
வருவோர் போவோரிடம்
சொல்லிக் கொண்டிருக்க
தாயம்மாக் கெழவி அரற்றினாள்
புள்ளமனசு ஒத்தயாடு கணக்கா அலமோதுது?
பட்டீகவண்டர் மகன் ஊடு வந்து சேந்தானா?
ஆராவது ஒரு எட்டுப் போயி
பாத்துப்போட்டு வந்து சொன்னாத்தான் என்ன??


________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)





No comments:

Post a Comment